கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024 - டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு

Published On 2024-04-20 13:36 GMT   |   Update On 2024-04-20 13:36 GMT
  • டெல்லி அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
  • ஐதராபாத் அணி நான்கு போட்டிகளில் வெற்றி.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணி இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மூன்று போட்டிகளில் வெற்றி, நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஐதராபாத் அணி ஆறு போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

இரு அணிகளும் தாங்கள் விளையாடிய கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

Tags:    

Similar News