கிரிக்கெட்

இதை செய்தால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி- ஜெய்ஷா

Published On 2024-05-10 17:20 GMT   |   Update On 2024-05-10 17:20 GMT
  • அனைத்து வீரர்களும் இனி பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும்.
  • ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக கடந்த காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான தேர்வு விரைவில் தொடங்கும் என்று ஜெயிஷா அறிவித்துள்ள நிலையில் புதிய கேப்டன் யார் என்ற கேள்வியும் கூடவே எழுந்திருக்கிறது. தற்போது ரோகித் சர்மாவுக்கு 38 வயது ஆகிவிட்டதால் அவர் நீண்ட காலம் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாது.

இன்னும் சொல்லப்போனால் 2024-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தான் அவருக்கு கேப்டனாக கடைசி தொடராக இருக்கலாம். இதனால் அடுத்த கேப்டன் யார் என்ற பந்தயத்தில் ஹர்திக் பாண்ட்யா கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.

ஹர்திக் பாண்ட்யா, குஜராத் அணிக்காக கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட நிலையில் அதன் பிறகு அவருடைய கேப்டன்ஷிப் மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது. எனினும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தான் துணை கேப்டன் பதவி கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

அனைத்து வீரர்களும் இனி பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும். ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக கடந்த காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் தற்போது வெள்ளை நிற கிரிக்கெட் பந்து தொடர்களில் ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் அடுத்த கேப்டன் பதவி வேண்டும் என்றால் உடல் தகுதியை நிரூபிப்பதோடு இனி உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட வேண்டும்.

என்று ஜெய்ஷா கூறினார்.

Tags:    

Similar News