கிரிக்கெட் (Cricket)

U19 ஆசிய கோப்பை: மழையால் டாஸ் கூட போட முடியாமல் அரையிறுதி ஆட்டம் பாதிப்பு

Published On 2025-12-19 12:37 IST   |   Update On 2025-12-19 12:37:00 IST
  • ஒரு அரையிறுதியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது.
  • மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.

துபாய்:

19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் அரையிறுதியில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை சந்திக்கிறது.

லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி அரையிறுதியிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம், மழை காரணமாக டாஸ் கூட போடமுடியாமல் உள்ளது. மற்றொரு அரைஇறுதி ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News