கிரிக்கெட்

அம்பதி ராயுடுவுக்கு பிரியாவிடை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Published On 2023-11-27 09:25 GMT   |   Update On 2023-11-27 09:25 GMT
  • 10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
  • சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அம்பதி ராயுடுவுக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளத்தில் போஸ்டருடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் லெஜண்டரி சிங்கம், களத்தில் இருக்கும் போது தனது 100% திறமையை கொடுக்கத் தவறுவதில்லை. உங்கள் முன்னேற்றத்திற்கு நன்றி என பதிவிட்டிருந்தனர்.

Tags:    

Similar News