சினிமா
சர்கார் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்கார்' படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்துள்ள நிலையில் தணிக்கை குழுவில் ‘சர்கார்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளனர். ரசிகர்களும் தீபாவளியை சர்கார் படத்தோடு கொண்டாட பேனர்கள், சுவரொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
#SarkarCensoredUApic.twitter.com/iEhz1ke9yZ
— Sun Pictures (@sunpictures) October 25, 2018
தீபாவளிக்கு முன்னதாக வருகிற 2-ந் தேதி படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2-ந் தேதி வெள்ளிக்கிழமை என்பதாலும் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதாலும் முன்னதாக படத்தை வெளியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
‘சர்கார்’ படத்தில் ராதாரவி, வரலட்சுமி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
கடந்த வாரம் வெளியான படத்தின் டிரைலர் வெளியான நிலையில், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தில், வெளிநாட்டில் பெரிய தொழில் அதிபராக இருக்கும் விஜய் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தமிழகம் வருகிறார். அவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு விடுகின்றனர். இதனால் அதிர்ச்சியாகி அரசியல்வாதிகளுடன் மோதுகிறார். நேர்மையான தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். தனக்கு ஆதரவாக இளைஞர்களை திரட்டி மோசமான அரசியல்வாதிகளை வீழ்த்தி எப்படி நல்லாட்சியை ஏற்படுத்துகிறார் என்பது தான் கதை என்கிறார்கள். #Sarkar #Vijay