சினிமா

கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு

Published On 2018-08-23 05:09 GMT   |   Update On 2018-08-23 05:09 GMT
தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு செய்துள்ளார். #KeralaRain #KeralaFlood #Lawrence
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவியாக வழங்க முடிவு செய்துள்ளார். இதை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வரும் 25ம் தேதி நேரில் சென்று வழங்க இருக்கிறார்.

முன்னதாக நடிகர்கள் கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட நிதியுதவி வழங்கியுள்ளார்கள். 



நடிகர் விக்ரம் ரூ.35 லட்சமும், நடிகர் விஜய் ரூ.70 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief 
Tags:    

Similar News