சினிமா

ஸ்டெர்லைட் தலைவர் கொடும்பாவி எரிப்பு - இயக்குனர் கவுதமன் கைது

Published On 2018-05-23 15:04 IST   |   Update On 2018-05-23 15:04:00 IST
ஸ்டெர்லைட் ஆலை தலைவரின் கொடும்பாவியை எரித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். #Bansterlite #SaveThoothukudi
தூத்துக்குடியில் ஸ்டெர் லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து நேற்று மாலை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் இயக்குநர் கவுதமன் தலைமையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. சந்திப்பு முடிந்து வெளியே வந்த கவுதமன் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலை தலைவரின் கொடும்பாவியை எரித்தனர். மாநில அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியவாறு சாலை மறியல் செய்ய முயன்றனர். இதைத்தொடர்ந்து கவுதமன் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #Bansterlite #SaveThoothukudi
Tags:    

Similar News