search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோட்டீஸ்"

    • மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூல்.
    • குணா பட பாடலை பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ்.

    மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்தனர். கேரளாவின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.

    கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி அவர் குணா படத்தில் நடக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

    மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் மிக்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில், தமிழில் கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலை பயன்படுத்தியுள்ளனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    படத்தில் இடம்பெறும் "கண்மணி அன்போடு காதலன்.." என்கிற பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் அந்த நோட்டீசில், "பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார்.

    அதனால் அவரிடம் முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.

    இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையில் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ்ஸுக்கு நடுவர் தீர்ப்பு.
    • டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு.

    டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் கடந்த 2012ம் ஆண்டில் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் கண்டறிந்த சில கட்டமைப்பு குறைபாடுகளை அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் (DAMEPL)நிறுவனம் சரிசெய்யவில்லை என்று கூறி ஒப்பந்தத்தை நிறுத்தியது.

    பின்னர், 2017ம் ஆண்டில், ஒரு நடுவர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் லைன் திட்டத்திற்கான சலுகை ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கான அந்நிறுவனத்தின் முடிவு செல்லுபடியாகும் என்று கூறி தீர்ப்பளித்தது.

    டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை உருவாக்குவதற்கும், இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையில் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ்ஸுக்கு நடுவர் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் (DAMEPL) நிறுவனம், டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனுக்கு 15 நாட்களுக்குள் சுமார் ரூ.2,599 கோடியை திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதன் அறிவிப்பின்படி, 15 நாட்களுக்குள் தொகையை டெபாசிட் செய்யத் தவறினால், டிஎம்ஆர்சி டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்ய நிர்பந்திக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடிஎஃப் வாசன் கடந்த வருடம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 வருடத்திற்கு ரத்து செய்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஜெயிலில் அடைக்கப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    இந்நிலையில் சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.

    அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

    • முன்ஜாமின் மனுவை திரும்ப பெறவும் ரேவண்ணா முடிவு.
    • சட்ட பிரிவுகள் அனைத்தும் ஜாமின் பெறக்கூடிய பிரிவுகள்தான்.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின.

    இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

    தொடர்ந்து, பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில், ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பியின் தாயாருக்கு விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணாவை தொடர்ந்து தாயார் பவானி விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    முன்ஜாமின் மனுவை திரும்ப பெறவும் ரேவண்ணா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்ட சட்ட பிரிவுகள் அனைத்தும் ஜாமின் பெறக்கூடிய பிரிவுகள்தான் என நீதிமன்றம் கூறிய நிலையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் இன்னும் ஆஜரா கவில்லை.
    • நோட்டீஸ் அனுப்ப டெல்லி போலீசார் முடிவு.

    திருப்பதி:

    மத்திய மந்திரி அமித்ஷாவின் போலி வீடியோ வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சுமார் 22 பேருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இந்த வழக்கில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சார்பில் அவருடைய வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் இன்னும் ஆஜரா கவில்லை. அவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 'கூலி' படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை பயன்படுத்தியதாக,இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
    • தற்போது இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படம் "கூலி" .இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படம் தங்க கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் ரஜினி 'மாபியா' ''டான்" வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.




    இந்நிலையில் ரஜினியுடன் பிரபல இந்தி நடிகர்கள் ரன்வீர் சிங், நாகார்ஜுனா, நடிகை ஷோபனா ,ஸ்ருதி ஹாசன் , நடிப்பதாக தகவல் வெளியானது. இப்படத்தின் 'சூட்டிங்' வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.

    இப்படத்தின் முதல் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதில், நடிகர் ரஜினிகாந்த் இரு கைகளிலும் கைகடிகாரத்தால் ஆன விலங்கை கட்டியிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றது.



    கடந்த சில நாட்களுக்கு முன் அந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியானது. அதில், இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த 'தங்கமகன்' படத்தில் இடம்பெற்ற "வா வா பக்கம் வா" பாடலின் இசையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது

    தான் இசையமைத்த பாடல்கள் முழுவதும் தனக்கு தான் சொந்தம் என்றும் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் மேடைகளில் பாடக்கூடாது என்றும் மற்ற படங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் ஏற்கனவே இளையராஜா கூறி இருந்தார்.




    இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தற்போது இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரதமர் மோடி மீது காங்கிரசும், ராகுல்காந்தி மீது பாஜகவும் நோட்டீஸ்.
    • நோட்டீஸ் தொடர்பாக வரும் 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவு.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் சொத்துக்கள், நிலங்கள், தங்கம் ஆகியவற்றை முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று பேசினார்.

    பிரதமரின் இந்த பேச்சு வெறுப்பை தூண்டுகின்றன என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தில் கடந்த திங்கட்கிழமை புகார் மனு அளித்தது.

    பிரதமருக்கு எதிரான புகார் குறித்து தேர்தல் ஆணையம் முதலில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இதே குற்றச்சாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து தேர்தல் பிரசார கூட்டங்களில் காங்கிரஸ் மீது சுமத்தினார். இது காங்கிரஸ் கட்சியை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

    இதற்கிடையே பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் அளித்த புகாரை ஆய்வு செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    பிரதமரின் பேச்சு தொடர்பான புகார் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன. அதே நேரத்தில் பிரதமருக்கு எதிராக வழக்கு தொடரவும் காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

    இந்த நிலையில் முஸ்லிம்கள் குறித்து பேசியது தொடர்பாக காங்கிரஸ் அளித்த புகார் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது.

    அவதூறாக பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும். இது தொடர்பாக வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்குள் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாகவும் அவர் மீது பா.ஜனதா தேர்தல் ஆணயைத்தில் புகார் அளித்து இருந்தது. பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாக தெரிவித்தது.

    ராகுல்காந்தியின் பேச்சும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் கருதியது. இதைத்தொடர்ந்து ராகுல்காந்தியும் வருகிற 29-ந் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக பா.ஜனதா, காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    முக்கிய தலைவர்களின் பேச்சு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே தாக்கல்.

    நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கணக்கு தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
    • அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.

    ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மற்றும் பாபட்லா தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்:-

    ஜெகன் மோகன் ரெட்டி ஒரு அரக்கன் திருடன், விலங்கு, மக்களை காட்டிக் கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் போன்ற சொற்களால் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இது ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது.

    இது குறித்து ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் லெல்லாஅப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார்.

    சந்திரபாபு நாயுடுவின் பேச்சு ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 48 மணி நேரத்தில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.
    • புகாரை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரின் சகோதரரும் தற்போதைய எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் டாக்டர் சி.என்.மஞ்சுநாத் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் ஆகியோர் வாக்காளர்களுக்கு அதிகளவில் குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டினார். இந்த தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.

    மேலும் பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் வாக்காளர்களுக்கு கொடுக்க அவரது புகைப்படத்துடன் கூடிய சுமார் 10 லட்சம் பிரஷர் குக்கர் விநயோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 4 லட்சம் குக்கர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதற்கிடையே குமாரசாமி புகாரை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ள னர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்யப்பட்டது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குக்கர் உற்பத்தி நிறுவனத்திடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் இதே போன்ற புகாரின் பேரில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடதக்கது.

    • பள்ளி சீருடையில் மாணவ-மாணவிகளும் நின்று மோடியை வரவேற்றனர்.
    • பள்ளி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

    கோவை:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் கோவையில் ரோடு ஷோ மூலம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஏராளமான பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

    அவர்களுக்கு மத்தியில் பள்ளி சீருடையில் மாணவ-மாணவிகளும் நின்று மோடியை வரவேற்றனர். இதற்கு தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திலும் புகார்கள் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    விசாரணையில் பேரணியில் பங்கேற்றது சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் என்பது தெரியவந்தது. கோவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி புனித அந்தோணியம்மாள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் விசாரணை அறிக்கையை அவர் கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையே குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதன்பேரில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களும் பிரதமர் மோடி நடை பயணத்தில் பங்கேற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்த பள்ளி மாணவர்கள், பள்ளி வேனிலேயே அழைத்துச் செல்லப்பட்டு பேரணியின் போது கலைநிகழ்ச்சி நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும் படி மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. பள்ளி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி நேற்று சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
    • பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    கோவை:

    கோவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி நடைபெற்றது. சாய்பாபா காலனி சிக்னல் அருகே தொடங்கிய இந்த வாகன பேரணியானது ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை நடைபெற்றது.

    சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் சீருடையுடன் அழைத்து வந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் மாணவ-மாணவிகளின் புகைப்படத்துடன் தகவல் வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உரிய விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அலுவலர்கள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள் இது தொடர்பாக நேற்று சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது குழந்தைகளை சரியாக பராமரிக்கவும் பாதுகாக்கவும் தவறியதாக சட்டப்பிரிவு 75 ஜே.ஜே.-ன் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    முன்னதாக கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி புனித அந்தோணியம்மாள் நேற்று சாய்பாபாகாலனியில் உள்ள சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணை 3 மணி நேரம் நடைபெற்றது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 24 மணி நேரத்துக்குள் விளக்கம் கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேற்று காலை நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் அந்த பள்ளிக்கு சென்று அதிகாரிகள் நடத்திய விசாரணை தொடர்பாக கலெக்டருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் விவகாரம் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு கோவை தேர்தல் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    ×