search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம்"

    • 26-ந் தேதி வரை கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
    • மழை காரணமாக சுற்றுலா தலங்கள் பசுமையுடன் காட்சி அளிக்கிறது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் மழை காரணமாக குளுகுளு சீசன் களை கட்டியுள்ளது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை நேரத்தில் இருந்தே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    ஏற்காட்டில் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதையடுத்து தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்கனவே 50ஆயிரம் பூந்தொட்டிகளில் ஜினியா, டேலியா, சால்வியா, கார்னேசன், ஜெர்பெரா, பெர்குன்யா, டெல்பீனியம், டிராகன் உட்பட 50 வகையான மலர்கள், 112 ரகங்களில் நடவு செய்யப்பட்டது.

    தற்போது அந்த மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இதேபோல் அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் பல்வேறு வகையான ரோஜாக்களும் நடவு செய்யப்பட்டு தற்போது அைவகளும் பூத்துக் குலுங்குகிறது.

    ஏற்காட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பூத்துக் குலுங்கும் பலவண்ண மலர்களை கண்டு ரசித்து போட்டோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அண்ணா பூங்காவில் உள்ள ஊஞ்சலில் விளையாடி குழந்தைகள் பொழுதை கழித்தனர்.

    படகு இல்லத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனால் அந்த பகுதியே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. படகு சவாரி செய்ய பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்தனர்.

    தற்போது டிசம்பர் மாதத்தில் இருப்பது போன்ற சீதோசண நிலை இருப்பதால் ஏற்காடு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையுடன் காட்சி அளிக்கிறது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏற்காடு நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது. ஓட்டல், பேக்கரி, பஜ்ஜி கடைகளில் சுடச்சுட சுற்றுலா பயணிகள் மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டனர்.

    மேலும் ஏற்காட்டில் விளையும் காய்கறிகளையும் சுற்றுலா பயணிகள் வாங்கி சென்றனர். அதிகளவில் சுற்றுலா பயணிகள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    அடுத்த வாரம் கோடை விழா தொடங்க உள்ள நிலையில் இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை கவனமாக இயக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

    • சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. கோடை காலம் தொடங்கியதும் வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே தினமும் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, தம்மம்பட்டி, சேலம் மாநகர பகுதிகளில் மழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரில் 17.4 மி.மீ. மழை பெய்தது. மேலும் ஏற்காட்டில் 6.6 மி.மீ. மழையும், தம்மம்பட்டியில் 8 மி.மீ. மழையும் என மாவட்டம் முழுவதும் 43 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்தது.

    நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் மோகனூர், ராசிபுரம், திருச்செங்கோடு, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மோகனூர்-34, பரமத்திவேலூர்-1, புதுச்சத்திரம்-12, ராசிபுரம்-4, திருச்செங்கோடு-11.20, கலெக்டர் அலுவலகம்-3.50, கொல்லிமலை-2. என மாவட்டம் முழுவதும் 66.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதற்கிடையே பேரிடர் மேலாண்மை துறையிடம் இருந்து இன்று முதல் 21-ந் தேதி வரை 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டதை அடுத்து நாமக்கல் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கொல்லிமலை சுற்றுலா பகுதிகளான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, புளியஞ்சோலை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் மேற்கண்ட சுற்றுலா தலங்களுக்கு வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இனி வரும் நாட்களில் பெய்யும்மழையின் அளவினை பொறுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா அறிவித்து உள்ளார்.

    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
    • அதிக பட்சமாக ஆத்தூரில் 96.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 5-வது நாளாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், கரியகோவில், நத்தகரை, சங்ககிரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது.

    குறிப்பாக ஆத்தூரில் நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய மழை இன்று அதிகாலை 2 மணி வரை கன மழையாக கொட்டியது. 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது.

    இதே போல நத்தக்கரை சங்ககிரி, கரியகோவில், மேட்டூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய சாரல் மழை இன்று காலையிலும் தூறலாக நீடித்தது.

    மழையை தொடர்ந்து சேலம் மநாகர் மற்றும் புறநகர் பகுதிகளில குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர். மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆத்தூரில் 96.4 மி.மீ. மழை பெய்துள்ளது. நத்தக்கரை-31, கரியகோவில்-26, சங்ககிரி-20, சேலம்-3.7, ஏற்காடு-4.4, ஆனைமடுவு-19, கெங்கவல்லி-6, தம்மம்படடி-10, ஏத்தாப்பூர்-2, வீரகனூர்-9, எடப்பாடி-4, மேட்டூர்-18.2, ஓமலூர்-4.2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 253.9 மி.மீ. மழை பெய்துள்ளது., இன்று காலையும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை தூறிய படியே இருந்தது.

    • சங்ககிரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    ஈரோடு பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில் ராஜா. இவர் இன்று ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 22 பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் சங்ககிரி சென்று கொண்டிருந்தார்.

    சங்ககிரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தாறுமாறாக ஓடிய பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. பேருந்து ஓட்டுநர் செந்தில் ராஜாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகின. பேருந்தில் பயணம் செய்த 22 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பேருந்த ரோட்டில் தாறுமாறாக வந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
    • தந்தையை இழந்து வாடும் தனி செயலாளர் தினேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (33), இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளராக உள்ளார். தினேஷ்குமாரின் தந்தை டி.வி. ரவி (60), தாய் சுமதி ஆகியோர் மட்டும் வெண்ணந்தூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

    இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, பொன்முடி, சுப்பிரமணியம், எ.வ.வேலு, மூர்த்தி, மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., மற்றும் சபரீசன், வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி மின் மயானத்தில் ரவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே டி.வி.ரவி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும் ரவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் 10.45 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் இங்கிருந்து காரில் மு.க.ஸ்டாலின் வெண்ணந்தூர் சென்றார். அங்கு தந்தையை இழந்து வாடும் தனி செயலாளர் தினேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் 12.30 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதையொட்டி அவர் செல்லும் பகுதிகளில் சேலம், நாமக்கல் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
    • முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி ராஜ முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.

    இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

    இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க முருகன் சிலையை புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கோவிலின் நிறுவன தலைவர் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்.

    இந்த முருகன் சிலைக்கு இதுவரை 40 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    • விமானங்கள் வரைவில் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • ஜூலை மாதம் முதல் இந்த விமான இயக்கம் தொடங்கும் என கூறினார்.

    சேலம்:

    சேலம் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத், கொச்சி, பெங்களூரு நகரங்களுக்கு அலையன்ஸ் ஏர், இண்டிகோ விமான சேவை தற்போது தினமும் நடைபெறுகிறது.

    இதில் உதான் அல்லாத திட்டத்தில் இண்டிகோ நிறுவனம், சென்னைக்கு விமானத்தை இயக்கி வருகிறது. இந்த நிலையில் ஏர்சபா விமான நிறுவனம் மதுரை, திருச்சி, திருப்பதி, மும்பை, சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவையை இயக்க விமான போக்குவரத்து ஆணையத்தில் அனுமதி பெற்றுள்ளது. இந்த விமானங்கள் வரைவில் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்யாயா கூறுகையில், சேலத்தில் இருந்து ஏர்சபா நிறுவனம் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளன. ஜூலை மாதம் முதல் இந்த விமான இயக்கம் தொடங்கும் என கூறினார் .

    • சேலம் மாநகரில் மதியம் 2 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்தது.
    • நீதிபுரம், லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 7ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொளுத்தியது . குறிப்பாக கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று பொது மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 104.9 டிகிரியாக பதிவானது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    ஏற்காட்டில் நேற்று காலை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மதியம் 1 மணியளவில் தொடங்கிய மழை 2.40 மணி வைர இடியுடன் கொட்டி தீர்த்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கல்வராயன் மலை, கருமந்துறை பகுதியில் மதியம் 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதே போல சேலம் வலசையூர், சுக்கம்பட்டி, குப்பனூர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    சேலம் மாநகரில் மதியம் 2 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்தது. குளிர்ந்த காற்று வீசியது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.

    மேட்டூரை அடுத்த கொளத்தூர் லக்கம்பட்டி, நீதிபுரம், காரைக்காடு, கண்ணாமூச்சு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இடி, மின்னலுட்தன் தொடங்கிய மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக சூறை காற்றுடன் கன மழையாக கொட்டியது. இந்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கொளத்தூர் அருகே உள்ள தண்டா, நீதிபுரம், லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 7ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதற்கிடையே மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 14.8, ஆனைமடுவு 8, பெத்தநாயக்கன்பாளையம் 6, காடையாம்பட்டி 4.8, கரியகோவில் 2, சேலம் 0.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 54.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது.
    • கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

    சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைய ஒரு தரப்பினருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனற பிரச்சனை கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருவதால் அறநிலையத்துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

    இந்த மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதனையொட்டி இந்த ஆண்டு மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மீண்டும் அந்த கோயிலில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது.

    இந்த மோதலில் 5 கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவப்பட்டிப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அங்கு அடைக்கப்பட்டன.

    கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காவல்துறையினர் பெண்கள் சிலரையும் தாக்கியதாக அப்பகுதியில் புகார் கூறிய பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், கோவில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க வலியுறுத்தி தீவட்டிப்பட்டி பகுதியில் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
    • வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு நிறையே பேர் சுற்றுலா செல்கின்றனர்

    தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    இந்நிலையில், ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது
    • சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இருவர் முயன்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

    • பிரதமர் மோடி இன்று சேலம் வந்தடைந்தார்.
    • கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார்

    கேரளாவில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி இன்று சேலம் வந்தடைந்தார். அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

    பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, "கடந்த 40-50 ஆண்டுகளுக்கு முன் கைலாஷ் யாத்திரை சென்றேன். அப்போது சேலத்தை சேர்ந்த ரத்தின வேல் என்பவர் என்னுடன் வந்தார்.

    அவர் சேலத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே வந்தார். அப்போது முதல் சேலத்தின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. உணவகம் ஒன்றை நடத்தி வந்தவர் இப்போது நம்மிடம் இல்லை என்று பேசியுள்ளார்.

    இதனையடுத்து, மோடிக்கு உண்மையாகவே சேலத்தில் ஒரு நண்பர் இருந்தாரா? இல்லை சேலத்தில் பேசுவதற்காக இப்படி ஒரு பொய்யை சொல்கிறாரா? என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

    ×