என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • ஐபோன் ஏர் 2 அம்சங்களை பொருத்தவரை, இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
    • ஆக்‌ஷன் பட்டனுடன் சேர்ந்து, ஐபோனின் இடது பக்கத்தில் வால்யூம் கண்ட்ரோல்கள் இடம்பெற்று இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது மிக மெல்லிய ஐபோன் மாடல்- "ஐபோன் ஏர்" அறிமுகம் செய்தது. ஐபோன் ஏர்-ஐ விட, ஐபோன் ஏர் 2 பெருமளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் ஏர் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    எனினும், ஐபோன் ஏர் 2 மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன் ஏர் 2 ரெண்டர் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. ரெண்டரில் புதிய ஐபோனின் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. மிக மெல்லிய மற்றும் லேசான கைபேசியின் சில முக்கிய அம்சங்களை ஒரு டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார்.

    ஐபோன் ஏர் 2 அதன் முந்தைய மாடலை போலவே அதே அளவிலான தோற்றம் கொண்டிருக்கலாம். மீண்டும் மீண்டும் மேம்படுத்தல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கேமரா துறையில் இது ஒரு பெரிய அப்டேட் பெறும் என்று தெரிகிறது.

    ஐபோன் ஏர் 2 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    சீனாவின் வெய்போ தள பதிவில், டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் ஐபோன் ஏர் 2 ரெண்டரை பகிர்ந்துள்ளது. இது அதன் வடிவமைப்பைக் காட்டுகிறது. இந்த போன் அதன் முந்தைய மாடலை போலவே வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும், புதிய ஐபோன் ஏர் 2 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம்.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் படச்த்தில், இந்த ஆண்டு வெளியாகி இருக்கும் ஐபோன் ஏர் மாடலை விட இது குறிப்பிடத்தக்க அப்டேட் பெறக்கூடும். புதிய ஐபோன் ஏர் மாடலில் 48MP பிரைமரி கேமராவுடன் வருகிறது.

    மற்ற வடிவமைப்புகள் ஐபோன் ஏர் போலவே இருக்கும் என்று தெரிகிறது. ஆக்ஷன் பட்டனுடன் சேர்ந்து, ஐபோனின் இடது பக்கத்தில் வால்யூம் கண்ட்ரோல்கள் இடம்பெற்று இருக்கும். பின்புற பேனலில் இரண்டு கேமரா லென்ஸ்கள், ஒரு பிரத்யேக மைக்ரோபோன் மற்றும் ஒரு எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்ட மாத்திரை வடிவ கேமரா பம்ப் இடம்பெறலாம்.

    ஐபோன் ஏர் 2 அம்சங்களை பொருத்தவரை, இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. புகைப்படங்கள் எடுக்க ஐபோன் ஏர் 2 மாடலில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா-வைடு கேமரா கொண்டிருக்கலாம்.

    • புதிய ரியல்மி GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 மாடல், பாரம்பரிய F1 அணியின் சின்னமான பச்சை நிறத்தில் உள்ளது.
    • இத்துடன் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

    ரியல்மி GT 8 ப்ரோ இந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நிறுவனத்தின் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்போனாக உள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் புகைப்படங்கள் எடுக்க Ricoh GR இமேஜிங் ஆதரவுடன் வரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இப்போது ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்டன் மார்ட்டின் F1 என்று அழைக்கப்பட இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் வருகிற 10ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    புதிய ரியல்மி GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 மாடல், பாரம்பரிய F1 அணியின் சின்னமான பச்சை நிறத்தில் உள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்திலும் நிறுவனத்தின் பிரான்டிங் தெரியும். ரியல்மி GT8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 மாடல் சிறப்பு பேக்கேஜிங் மற்றும் அக்சஸரீக்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் பிரத்யேக தீம்கள், வால்பேப்பர் மற்றும் ஐகான்களை கொண்டிருக்கும்.

    சிறப்பு வடிவமைப்பை தவிர ரியல்மி GT 8 Pro ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய கேமராக்களுடன் வருகிறது. நீங்கள் பின்புற கேமரா தொகுதியை மாற்றி வேறு ஒன்றிற்கு மாற்றலாம். இது சதுரம், வட்டம் மற்றும் "ரோபோ" பாணியில் மற்றும் வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது.

    வடிவமைப்பு மற்றும் அம்சங்களைத் தவிர, ஹார்டுவேர் பெரும்பாலும் ரியல்மி GT 8 ப்ரோவின் வழக்கமான மாடலைப் போலவே இருக்கும். இது 6.79-இன்ச் QHD+ (1,440×3,136 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 7,000 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி UI 7.0 உடன் இயங்குகிறது.



    மேலும், இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரியல்மி GT 7 ப்ரோ மாடலில் உள்ள 5,800mAh பேட்டரியில் இருந்து ஒரு பெரிய அப்டேட் ஆகும். இத்துடன் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

    புகைப்படங்கள் எடுக்க ரியல்மி GT 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, x ஆப்டிகல் ஜூம் மற்றும் 6x லாஸ்லெஸ் ஜூம் கொண்ட 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 50MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா ஆகியவை உள்ளன.

    • இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் 5,440mAh பேட்டரி கொண்டுள்ளது.
    • விவோX300 ப்ரோ ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம், ஆக்ஷன் பட்டன் கொண்டுள்ளது.

    விவோ X300 ப்ரோ மற்றும் விவோX300 ஆகியவை உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன. சீனாவில் விவோX300 சீரிஸ் அறிமுகமான இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் முதன்மையான 3nm ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் கொண்டிருக்கின்றன.

    மேலும், விவோX300 ப்ரோ மற்றும் விவோ X300 ஸ்மார்ட்போன்கள் மூன்று பின்புற கேமரா சென்சார்களை கொண்டுள்ளன. முன்பக்கத்தில், இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 50MP செல்ஃபி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பஞ்ச் டிஸ்ப்ளே கட்அவுட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய தகவல்களின்படி, விவோ X300 சீரிஸ் டிசம்பர் மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    விவோ X300 ப்ரோ அம்சங்கள்:

    விவோX300 ப்ரோ மாடல் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கிறது. இது 6.78-இன்ச் 1,260×2,800 பிக்சல் ஃபிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப், மாலி G1-அல்ட்ரா GPU உடன் வருகிறது. மேலும், 16 ஜிபி LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512 ஜிபி UFS 4.1 மெமரியுடன் கிடைக்கும்.

    புகைப்படங்களை எடுக்க விவோX300 ப்ரோ ஸ்மார்ட்போன் 50MP (f/1.57) பிரைமரி கேமரா, 50MP (f/2.0) அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 200MP (f/2.67) பெரிஸ்கோப் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50MP (f/2.0) செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.



    சென்சார்களை பொருத்தவரை 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார், ஹால் எஃபெக்ட் சென்சார், ஐஆர் பிளாஸ்டர், ஃப்ளிக்கர் சென்சார் மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார் ஆகியவை அடங்கும். கனெக்டிவிட்டிக்கு வைஃபை 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS மற்றும் USB 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட் கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் 5,440mAh பேட்டரி கொண்டுள்ளது. விவோX300 ப்ரோ ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம், ஆக்ஷன் பட்டன் கொண்டுள்ளது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 சான்று பெற்றுள்ளது.

    விவோ X300 அம்சங்கள்:

    விவோX300 ஸ்மார்ட்போனிலும், ப்ரோ வேரியண்ட்டில் உள்ள அதே பிராசஸர், ஓஎஸ், கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. எனினும், இது சிறிய 6.31-இன்ச் 1,216×2,640 பிக்சல் ஃபிளாட் Q10+ LTPO AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது. மேலும், விவோX300 ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக, இது 5,360mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    புகைப்படம் எடுக்க விவோ X300 மாடலில் OIS உடன் 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோப் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ப்ரோ மற்றும் ஸ்டாண்டர்ட் மாடல்கள் இரண்டும் ஒரே செல்ஃபி கேமராவுடன் வருகின்றன.

    விவோ X300 சீரிஸ் விலை விவரங்கள்:

    புதிய விவோ X300 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரியுடன் கூடிய ஒரே வேரியண்ட் விலை யூரோக்கள் 1,399 (இந்திய மதிப்பில் ரூ. 1,43,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவோ X300 விலை 1,049 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,08,000) இல் இருந்து தொடங்குகிறது.

    விவோ X300 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் நவம்பர் 3ஆம் தேதி ஐரோப்பாவில் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்பனைக்கு வரும். விவோ X300 ப்ரோ டியூன் பிரவுன் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது. விவோ X300 ஸ்மார்ட்போன் ஹாலோ பிங்க் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    • மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் உடன் வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் வசதி கொண்டிருக்கும்.

    மோட்டோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஜி86 பவர் மாடலுக்குப் பிறகு, நவம்பர் 5 ஆம் தேதி மோட்டோ நிறுவனம் ஜி பவர் சீரிசில் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனாக ஜி67 பவர் என்ற மாடல் அறிமுகம் செய்யப்படுவதாக மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    புதிய ஸ்மார்ட்போனில் 7000mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி வழங்குவதை மோட்டோரோலா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 58 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். புகைப்படங்கள் எடுக்க 50MP சோனி LYT-600 சென்சார், 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் அனைத்து கேமராக்களிலும் 4K ரெக்கார்டிங் வசதி, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் ஸ்கிரீன் பாதுகாப்பிற்காக இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு மற்றும் MIL-810H சான்றிதழுடன் இராணுவ தரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP64 சான்றுடன் வர இருக்கிறது. மேலும் 6.7-இன்ச் FHD+ 120Hz ஸ்கிரீன் கொண்டுள்ளது. இத்துடன் 3 பேன்டோன் சார்ந்த நிறங்களல் வீகன் லெதர் ஃபினிஷுடன் வரும். மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் வசதி கொண்டிருக்கும்.

    மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் உடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனிற்கு விரைவில் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வழங்குவதை மோட்டோரோலா உறுதிப்படுத்தி உள்ளது.

    அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், மோட்டோரோலா இந்தியா வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும். அடுத்த வாரம் போன் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும்போது இதன் விலையை தெரிந்துகொள்ளலாம்.

    • புதிய நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
    • நத்திங் போன் 3a லைட் நவம்பர் மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. அந்த வகையில், நத்திங் நிறுவனம் இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் முன்னதாக கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றிருந்தது.

    இந்த வரிசையில், தற்போது, நத்திங் போன் 3a லைட் விலை மற்றும் வெளியீட்டு தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. புதிய நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    பிரெஞ்சு வெளியீடான டீ-லேப்ஸ் அறிக்கையின்படி , நத்திங் போன் 3a லைட் நவம்பர் மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 04 ஆம் தேதி ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தவிர, பிரான்சில் இந்த ஸ்மார்ட்போன் 249.99 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 25,525) ஆரம்ப விலையில் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

    சில ஐரோப்பிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்போனின் விலை EUR 239.99 ஆக இன்னும் குறைவாக இருக்கலாம் என்றும் அறிக்கை கூறுதுகிறது. மேலும், நத்திங் போன் 3a லைட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கக்கூடும்.

    நத்திங் போன் 3a லைட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    கீக்பென்ச் தள விவரங்களின் படி, இந்த ஸ்மார்ட்போன் A001T என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மாலி-G615 MC2 GPU கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய நத்திங் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் உடன் வரும் என்றும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    • இந்த ஸ்மார்ட்போன் 7800mAh பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது.
    • ஸ்மார்ட்போன் குயிக்சில்வர், ஃபிளாஷ் வைட் மற்றும் ரேசிங் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கும்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் பேசப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 15 மாடலுடன் அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் வருகிற 27ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகமாகின்றன. ஸ்மார்ட்போன் வெளியீடு உறுதியாகி இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் சீனா டெலிகாம் வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன.

    டெலிகாம் வலைத்தள பட்டியலில் ஒப்போ PLQ110 என்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குயிக்சில்வர், ஃபிளாஷ் வைட் மற்றும் ரேசிங் பிளாக் என மூன்றுநிறங்களில் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துவிட்டது.

    இந்த ஸ்மார்ட்போன் அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என்றும், IP66/68/69/69K டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என்று ஒன்பிளஸ் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 7800mAh பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் ஏஸ் 6 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.78-இன்ச் (2800×1272 பிக்சல்கள்) 1.5K AMOLED டிஸ்ப்ளே 165Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3nm பிராசஸர், அட்ரினோ 830 GPU

    12GB / 16GB LPDDR5X RAM, 256GB / 512GB / 1TB UFS 4.1 மெமரி

    டூயல் சிம் (நானோ + நானோ)

    ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர்ஓஎஸ் 16

    50MP பிரைமரிகேமரா, OIS

    8MP 120° அல்ட்ரா-வைடு கேமரா, 4K 60 fps வீடியோ பதிவு

    16MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்

    யுஎஸ்பி டைப்-சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 7 802.11 be (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4

    7800mAh பேட்டரி

    120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • ஸ்மா்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • புதிய ஐகூ 15 மாடலில் மிகப்பெரிய 8000மிமீ ஒற்றை அடுக்கு வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

    ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி, சீன சந்தையில் ஐகூ 15 ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6.85-இன்ச் 2K+ 144Hz 8T LTPO ஃபிளாட் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இது உலகின் முதல் 2K LEAD OLED தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. குறைந்த மின் நுகர்வு, அதிக பிரகாசம், மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் நட்பு, மெலிதான வடிவமைப்பு மற்றும் உலகின் முதல் மகிழ்ச்சியான கண் பாதுகாப்பு 2.0 ஆகியவற்றை வழங்குகிறது.

    இந்த ஸ்மா்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கிறது. 16 ஜிபி வரை LPDDR5X அல்ட்ரா ப்ரோ ரேம் மற்றும் 1 டிபி வரை UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. புதிய ஐகூ 15 மாடலில் மிகப்பெரிய 8000மிமீ ஒற்றை அடுக்கு வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க ஐகூ 15 ஸ்மார்ட்போன் OIS உடன் 50MP பிரைமரி கேமரா, 50MPஅல்ட்ரா-வைடு லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா, 50MP சோனி ப்ரோ-லெவல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை உள்ளன.



    புதிய ஐகூ 15 ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 100W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    விலை விவரங்கள்:

    சீன சந்தையில் புதிய ஐகூ 15 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 4199 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 51,780 என துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    • மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன.
    • ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதியை அறிவித்தது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத இறுதியில் சீன சந்தையில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்றொரு டாப் என்ட் மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 6உடன் வரும் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதி

    சீனாவின் வெய்போ தள பதிவில், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு) அறிமுகம் செய்யப்படும் என்று கூறியது.

    இது ஒன்பிளஸ் 15ஐ போன்ற கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    ஒன்பிளஸ்15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 இரண்டும் ஒப்போ இ-ஷாப், ஜெடி மால் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் முன்பதிவிற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. அக்டோபர் 27 அறிமுகத்திற்குப் பிறகு அவை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டுடன் வரும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 165Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 1.5K OLED ஸ்கிரீன் கொண்டிருக்கலாம். இத்துடன் 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட், 1.5K BOE OLED ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐபேட் ப்ரோவின் செல்லுலார் மாடல்கள் C1X மோடம் கொண்டுள்ளன.
    • M5 சிப்செட் உடன் வரும் புதிய ஐபேட் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ சீரிசை அப்டேட் செய்துள்ளது. இவை கடந்த ஆண்டு வெளியான M4 சிப்செட் கொண்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ஐபேட் ப்ரோ சமீபத்திய M5 சிப்செட் கொண்டிருக்கின்றன.

    இந்த டேப்லெட் வழக்கம் போல் 11-இன்ச் மற்றும் 13-இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இவை புதிய M5 சிப்செட் உடன் வருகிறது. இதன் 256GB மற்றும் 512GB மாடல்களில் 9-கோர் CPU உடன் 3 பெர்ஃபார்மன்ஸ் கோர்கள் மற்றும் 12GB RAM உள்ளது. இதன் 1TB மற்றும் 2TB மாடல்களில் 10-கோர் CPU மற்றும் 16GB RAM உள்ளது. இவை இரண்டும் 10-கோர் GPU மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சினைக் கொண்டுள்ளன.

    ஐபேட் ப்ரோவின் செல்லுலார் மாடல்கள் C1X மோடம் கொண்டுள்ளன. அவை 50% வேகமான செல்லுலார் தரவு செயல்திறனை உறுதியளிக்கின்றன. மேலும் செயலில் உள்ள செல்லுலார் பயனர்களுக்கு, M4 உடன் ஐபேட் ப்ரோவை விட 30% வரை குறைவான மின் பயன்பாட்டை உறுதியளிக்கின்றன என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    புதிய ஐபேட் ப்ரோ மாடலில், வைஃபை 7, ப்ளூடூத் 6 மற்றும் த்ரெட் ஆகியவற்றை இயக்கும் புதிய ஆப்பிள் வடிவமைத்த வயர்லெஸ் நெட்வொர்க்கிங் சிப்: N1 இடம்பெற்றுள்ளது. 5GHz நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது N1 சிறந்த செயல்திறனைக் கொண்டுவருகிறது. மேலும் பெர்சனல் ஹாட்ஸ்பாட் மற்றும் ஏர் டிராப் போன்ற அம்சங்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறதும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.



    M5 சிப்செட் உடன் வரும் புதிய ஐபேட் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கிறது. ஆப்பிளின் புதிய 40W டைனமிக் பவர் அடாப்டர், 60W மேக்ஸ் ஆப்ஷனல் யுஎஸ்பி சி பவர் அடாப்டர் பயன்படுத்தி சுமார் 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய உதவுகிறது.

    ஐபேட் ப்ரோ (2025) சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை 256 ஜிபி மாடல் ரூ. 99,900 என்றும், ஐபேட் ப்ரோ 11-இன்ச் (வைபை + செல்லுலார்) 256 ஜிபி – ரூ. 1,19,900 என்றும் ஐபேட் ப்ரோ 13-இன்ச் (வை-பை) 256 ஜிபி ரூ. 1,29,900 என்றும்

    ஐபேட் ப்ரோ 13-இன்ச் (வைபை + செல்லுலார்) 256 ஜிபி – ரூ. 1,49,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2025 ஐபேட் ப்ரோ மாடல்கள் அக்டோபர் 22ஆம் தேதி முதல் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

    • IP68 மற்றும் IP69 தரச்சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது.
    • ஸ்மார்ட்போன் குவாட் கர்வ்டு டிஸ்பிளே, செல்பி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட் அவுட் கொண்டிருக்கிறது.

    சந்தைக்கு புதிதாக வந்திருக்கும் விவோ V60e, பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக, 200MP கேமராவுடன் ரூ.29,999 விலையில் கிடைக்கிறது. AI பெஸ்டிவல் போர்ட்ரெய்ட் என அழைக்கப்படும் இந்தியாவிற்கான பிரத்யேக புகைப்பட அம்சத்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

    6,500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய விவோ V60e ஸ்மார்ட்போன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் IP68 மற்றும் IP69 தரச்சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் கர்வ்டு டிஸ்பிளே, செல்பி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட் அவுட் கொண்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன் டச் ஓஎஸ் கொண்டிருக்கும் விவோ V60e ஸ்மார்ட்போனிற்கு, ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்டுகள் வழங்குவதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போன்றவை இதன் மதிப்பை உயர்த்துகிறது.

    • அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல.
    • ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன.

    ஒப்போ நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி சீன சந்தையில் தனது ஒப்போ ஃபைண்ட் X9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிவிக்க இருக்கிறது. புதிய ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ தவிர, ஒப்போ பேட் 5 டேப்லெட் மற்றும் ஒப்போ வாட்ச் எஸ் ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட சாதனங்களையும் ஒப்போ நிறுவனம் இதே நிகழ்வில் வெளியிட உள்ளது.

    இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனி வெளியீட்டு நிகழ்வை நடத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், இந்தியாவில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸில் இந்தியா வெளியீட்டு காலக்கெடுவை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

    ஒப்போ ஃபைண்ட் X9 வெளியீடு

    இந்திய சந்தையில் டிமென்சிட்டி 9500 சிப்செட் மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ ஃபைண்ட் X9 மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டைப் பொறுத்தவரை, இந்த மாடல்கள் நவம்பரில் நடைபெறும்.

    அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல. சமீபத்திய தகவல்களில் ரியல்மி நிறுவனம் தனது GT 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடலாம் என்றும், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன. இரு மாடல்களும் அசத்தலான புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குவதால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.
    • பாதுகாப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்யும் நம்பகமான துணையாக செயல்படுகிறது.

    இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2025 நிகழ்வில், ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபாரத் மொபைல் போன்களுக்கான புதிய சேஃப்டி-ஃபர்ஸ்ட் (Safety First) திறனை அறிமுகப்படுத்தியது. இது குடும்ப தகவல் தொடர்பை மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் ஜியோவின் மலிவு விலை 4ஜி தொலைபேசி தளத்திற்குள் ஸ்மார்ட் இணைப்பு மற்றும் டிஜிட்டல் பராமரிப்பை இணைத்து குடும்பங்கள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட உதவுகிறது.

    ஜியோபாரத் சேஃப்டி ஃபர்ஸ்ட் தீர்வு, குடும்பங்கள் குழந்தைகள், வயதான பெற்றோர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களுடன் நெருக்கமாக இருக்க எளிய, பாதுகாப்பான வழியை வழங்குகிறது, இவை அனைத்தும் அவர்கள் தூரத்திலிருந்து கூட. ஜியோ இந்த பாதுகாப்பு தொகுப்பை "பாதுகாப்பு கேடயம்" என்று குறிப்பிடுகிறது.

    முக்கிய அம்சங்கள்:

    இருப்பிட கண்காணிப்பு: அன்புக்குரியவரின் இருப்பிடம் குறித்த நிகழ்நேர அப்டேட்களை வழங்குகிறது.

    யூசேஜ் மேனேஜர்: யார் அழைக்கலாம் அல்லது செய்தி அனுப்பலாம், தெரியாத எண்களைத் தடுக்கலாம் மற்றும் கவனச் சிதறல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தலாம்.

    சேவை ஆரோக்கியம்: நிலையான இணைப்பை உறுதி செய்வதற்காக பேட்டரி நிலை மற்றும் நெட்வொர்க் வலிமை குறித்த நேரடி விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறது.

    எப்போதும் கிடைக்கும்: அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குவதால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.

    இந்திய வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது

    குழந்தைகளுக்காக: அழைப்பு மற்றும் இருப்பிடக் கட்டுப்பாட்டுடன், சமூக ஊடக வெளிப்பாடு இல்லாமல் பாதுகாப்பான தகவல்தொடர்பை செயல்படுத்துகிறது.

    வயதான பெற்றோருக்கு: மன உறுதிக்காக ஆரோக்கியம் மற்றும் லொகேஷன் அப்டேட்களுடன் கூடிய எளிய இன்டர்ஃபேஸ் வழங்குகிறது.

    பெண்களுக்கு: பாதுகாப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்யும் நம்பகமான துணையாக செயல்படுகிறது.

    IMC25 இல், ஜியோ இந்த அம்சங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் மன அமைதியை எவ்வாறு வழங்குகின்றன என்பதைக் காட்டும் நிஜ வாழ்க்கை பயன்பாட்டு நிகழ்வுகளை நிரூபித்தது - ஒவ்வொரு இந்தியருக்கும் தொழில்நுட்பம் என்ற அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

    ஜியோபாரத் சேஃப்டி-ஃபர்ஸ்ட் போன்கள் ரூ. 799 விலையில் கிடைக்கின்றன.

    ×