search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளபெருக்கு"

    • தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது
    • அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால், அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    அண்மையில் ஜம்மு காஷ்மீரில் கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது.

    தற்போது அசாம் மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமின் டிமா ஹசாவ் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    மே 4 ஆம் தேதி வரை டிமா ஹசாவ் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்பதால் அதுவரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மே 04 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குடியிருப்புகளுக்கு நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
    • தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி நாளை வரை கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    கோத்தகிரி பகுதியில் விடிய, விடிய பெய்த மழைக்கு கீழ்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது.

    இந்த மழைக்கு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை அருகே 5 இடங்களில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததோடு மண்சரிவுகளும் ஏற்பட்டது.

    பர்லியார்-கல்லாறு சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்களும் பெயர்ந்து சாலையில் விழுந்தது.

    தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, மரங்களை வெட்டி அகற்றி, மண்சரிவை சரி செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பந்தலூர் பகுதியிலும் கனமழை பெய்தது. இதில் எருமாடு அருகே ஆண்டவன் சிறாவில் உள்ள வீரேந்திரன் எனபவரின் வீடு சேதம் அடைந்தது.

    பந்தலூர் பகுதியில் பெய்யும் தொடர்மழைக்கு பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் நகரின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி மெதுவாகவே சென்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றதால் துர்நாற்றம் வீசியது. இதனால் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து மிதந்து கொண்டிருந்தன. பொதுமக்கள் பத்திரமாக தேவையான பொருட்களை உயரத்தில் வைத்து கொண்டனர்.

    இன்னும் பல இடங்களில் குடியிருப்புகளுக்கு நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    முழங்கால் அளவையும் தாண்டி தண்ணீர் சென்றதால் மக்களால் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழ்நிலை உருவானது.

    மேட்டுப்பாளையம் நகராட்சி 20-வது வார்டு மாதையன் லே-அவுட், அன்பு சீரணி நகர், நகராட்சி அண்ணா வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

    குறிப்பாக மாதையன் லே அவுட் குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. காட்டாறு போல சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் பொதுமக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது.

    வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதோடு மட்டுமின்றி பல்வேறு இடங்களில் குடியிருப்புக்கு அருகேயும் குளம் போல் தண்ணீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.

    இதேபோல் மேட்டுப்பாளையம் நகராட்சி 6-வது வார்டில் வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் என்பவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் காரமடை நில வருவாய் அலுவலர் ரேணுகாதேவி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    ×