search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்"

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.
    • உதவி ஆணையாளர் ராம்குமார் தலைமை தாங்குகிறார்

    திருப்பூர் :

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலால் உதவி ஆணையாளர் ராம்குமார் தலைமை தாங்குகிறார். இதில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம் என்று கலால் உதவி ஆணையாளர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

    • அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம்.
    • விவசாயிகள் மாவட்ட கலெக்டரை அணுகி, விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 29-ந்ேததி மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் காலை 10மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண் : 20 ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேரடியாக நடை பெறவுள்ளது. கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் மாவட்ட கலெக்டரை அணுகி, விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்படுகிறது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (மிமீஸ் போர்ட்டல்)பதிவு செய்து கொள்ளவும். வேளாண் - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வருகிற 28-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    கிருஷ்ணகிரியில் வருகிற 28-ம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
    • வெள்ளப்பெருக்கு காலங்களில் ஆற்றில் செல்லும் நீரளவை கணக்கிடும் பொருட்டு, நீர் அளவீட்டுக் கருவிகள் அமைத்திடவும், போன்ற பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் முன் வைத்தனர்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,

    வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடப்பு பருவத்திற்கு விவசாயிகளுக்கு விநியோகம் செய்திடும் பொருட்டு நெல் விதைகள் 61 மெ.டன்னும், பயறு வகை விதைகள் 35 மெ.டன்னும், எண்ணெய் வித்துப் பயிர் விதைகள் 4 மெ.டன்னும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் பயறு விதைகள் 50 சதவிதம் அல்லது கிலோ ரூ.50, எண்ணெய்வித்து விதைகள் 50 சதவிதம் அல்லது கிலோ ரூ.40- என்ற மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. துவரையில் வரிசை விதைப்பு மேற்கொள்ள எக்டருக்கு 50 (அ) 4500 வீதம் 200 எக்டருக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உளுந்து பயிரில் தொகுப்பு செயல் விளக்கம் 400 எக்டரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1026 மெ.டன்னும், பொட்டாஷ் 644 மெ.டன் மற்றும் கலப்பு உரங்கள் 2850 மெ.டன்னும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உர நிறுவனங்களை தொடர்புகொண்டு மாத ஒதுக்கீட்டின்படி சப்ளை செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், உரம் கிடைப்பதில் பிரச்சினை, ஒரு உரத்துடன் பிற இணை பொருட்கள் வாங்க நிர்பந்திப்பது மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது பற்றி வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், எதக்கைப்பூண்டு, சணப்பு போன்றவை வேளாண்மை துறையின் மூலம் வழங்கிடவும், மழையினால் சேதமடைந்த பருத்தி பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையினை விரைந்து வழங்கிடவும், மேலும், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாய நிலங்களை உழவு மற்றும் கவாத்து செய்திட எந்திரங்கள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்திடவும், ஆவின் பால் விலையை உயர்த்தி தருமாறும், அணைக்கரைப்பட்டி பகுதியில் விவசாய நிலங்களுக்கு சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளதால் அங்கு பாலம் அமைத்துதரவும்,

    ஆண்டிபட்டி பகுதியில் உள்ள 30 கண்மாய்களுக்கும் தண்ணீர் நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், பெரியகுளம் நல்லகருப்பன்பட்டி பகுதியில் உள்ள கண்மாயில் மழையினால் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளதை சரிசெய்து தரவும், வருசநாடு பகுதியில் மின் தடை ஏற்படுவதால் அரசு புறம்போக்கு நிலத்தில் துணை மின் நிலையம் அமைத்து மின் தடையினை சரிசெய்திடவும், அகமலை பகுதியில் விரைந்து மின்சார வசதி செய்துதரவும், தும்மக்குண்டு முதல் வாலிப்பாறை வரை சாலை வசதி ஏற்படுத்திதரவும்,

    மேலும் பி.டி.ஆர் வாய்க்கால் பாசன கண்மாய், அம்பாசமுத்திரம் பாலகிருஷ்ணா கண்மாய் பகுதியில் முள் மரங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், பெரியகுளம் வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் உபஆறுகளான கல்லாறு, பாம்பாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காலங்களில் ஆற்றில் செல்லும் நீரளவை கணக்கிடும் பொருட்டு, நீர் அளவீட்டுக் கருவிகள் அமைத்திடவும், போன்ற பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் முன் வைத்தனர்.

    • கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகளுக்கு தங்கு தடை இன்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் வனத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகள் குறித்து மனுவாக அளித்தனர். தொடர்ந்து அரசு வழங்கும் நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு தங்கு தடை இன்றி வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

    மேலும் வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.

    ×