search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலைக்கு"

    • விற்பனையாளர் சஸ்பெண்டு
    • அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வருவாய் துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் முழுவ தும் கள்ளச்சாராயம் மற்றும் அனுமதியின்றி மது விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 13 மதுபானக்கடைகளில் இருந்து ரூ.84 ஆயிரத்து 400அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒரு மதுபான விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலால் உதவிஆணையர், கோட்ட ஆய அலுவலர், கல்குளம் தாசில்தார், வருவாய் அலுவலர்கள் இரணியல் ரோட்டில் செயல்பட்டு வரும் கிளப்பில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது உறுப்பினராக பதிவு செய்யப்படாத நபர்கள் மது அருந்தியது தெரிய வந்தது.

    எனவே விதி மீறலுக்காக கிளப்பின் மீது உரிய நடவ டிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உரிமம் வழங்கும் அலுவலரான சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத் துறை ஆணையருக்கு பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடும் மதுபான கடை ஊழியர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கையும் விதி மீறல்களில் ஈடுபடும் கிளப் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
    • சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    சென்னை முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அஞ்சுகிராமம் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நியாய விலைக்கடைகள், கிடங்குகள் மற்றும் சுற்றுலா, வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாங்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதுபற்றி தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு கூறுகையில், முத்திரை இடப்படாத எடையளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் அதிகபட்சமாக சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர் பதிவு சான்று பெறாதது, பொருட்களில் குறிப்பிட்டுள்ள எடை மற்றும் அளவுகள் இல்லாமை ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    • அணையில் பிடிக்கும் ஜிலேபி, கட்லா, மிருகால், ரோகு உள்ளிட்ட மீன் இனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
    • அதிக விலைக்கு மீன்களை விற்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மீன்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதிக்கு செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமை ந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை நீர்த்தேக்க பகுதி.

    வடகிழக்கு பருவ காலங்களில் நிரம்பி வழியும் இந்த அணைக்கு கல்லுப்புள்ளம், வரட்டு பள்ளம், கும்பரபாணி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வந்து சேரும்.

    பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில், மீன் வளத்துறை சார்பில் மீன் குஞ்சுகள் இருப்பு வைத்து வளர்க்கப்படுகிறது. நன்கு வளர்ந்த மீன்களை பிடித்து மீன்வளத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    கடந்த இரண்டு ஆண்டு களாக கூட்டுறவு மீனவர் சங்கத்தின் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க டெண்டர் மூலம் மீன் பிடிக்கும் அனுமதி கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டு மீன் பிடிக்கும் குத்தகைக்காக 18 லட்சம் ரூபாய் கூட்டுறவு சங்க மூலம் அரசுக்கு செலுத்தப்பட்டு ள்ளது.

    கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு டெண்டர் விடப்பட்டதால், மீன்பிடி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    அணையில் மீன் பிடிக்கும் தொழிலாளர்க–ளுக்கு ஒரு பங்கு, கூட்டுறவு சங்கத்திற்கு ஒரு பங்கு என பிரித்து கொடுக்கப்படுகிறது.

    அணையில் பிடிக்கும் ஜிலேபி, கட்லா, மிருகால், ரோகு உள்ளிட்ட மீன் இனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், தொழிலா ளர்களுக்கு வழங்கப்படும் பங்கு மீன்கள் 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை சூழ்நிலைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், அணையில் பிடிக்கும் மீன்களை அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பிடிக்கும் ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் அனைத்தும் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விற்பனை செய்ய வேண்டும். மீன் பிடிக்கும் தொழிலாளர்களுக்கு தனியாக பங்கு மீன்கள் வழங்க அரசாணை எதுவும் கிடையாது.

    இந்தச் சூழ்நிலையில் அணையில் பிடிக்கும் மீன்களில் 50 சதவீதம் கூட்டுறவு சங்கத்திற்கு கொடுத்து கிலோ 100 ரூபாய்க்கும், பங்கு மீன்கள் என்ற முறையில் 50 சதவீத தொழி லாளர்களிடம் கொடுத்து ஒரு கிலோ 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். அதிக விலைக்கு மீன்களை விற்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மீன்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    மேலும் மீன் வாங்கும் பொது மக்களுக்கு முறையான ரசீது வழங்குவதில்லை. இது மட்டுமின்றி மீன் பிடித்து விற்பனை செய்யும் வரை மீன்வளத்துறை அதிகாரி மற்றும் மேற்பார்வையாளர் உடன் இருக்க வேண்டும். ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக மீன்வளத்துறை அதிகாரிகள் யாரும் வரட்டுப்பள்ளம் அணைக்கு வருவதில்லை.

    இதனால் டெண்டர் எடுத்தவர்கள் எவ்வளவு மீன் பிடித்தார்கள்? விற்பனை செய்தார்கள்? என்ற கணக்கும் கேள்விக்குறியாக உள்ளது.

    இங்கு தன்னிச்சையாக செயல்படும் சில உறுப்பி னர்கள் நாள்தோறும் மீன்வளத்துறை அதிகாரி–களுக்கு தாங்கள் பிடித்ததா–கவும் விற்பனை செய்ததா–கவும் அனுப்பும் கணக்கு மட்டுமே பதிவு செய்யப்படு–கிறது. இதனால் இந்த அணையின் மூலம் விற்பனை செய்யப்படும் மீன் வர்த்தகத்தில் பல லட்சம் ரூபாய் அரசாங்கத்திற்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×