search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைத்தறி கூடம்"

    • மத்திய அரசு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவு பயிற்சி வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன,
    • நெசவாளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் நேற்று கைத்தறி நெசவு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. சர் பிட்டி தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் முன்னிலையில், சேலம் நெசவாளர் சேவை மைய இணை இயக்குனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

    மத்திய அரசு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, நெசவாளர்களுக்கு 90 சதவீத மானியத்துடன் தறி மற்றும் உபகரணங்கள் , நெசவாளர் தறி கூடம் அமைக்க ரூ.1லட்சத்து 20 ஆயிரம் மானியம் பெறவும், நெசவாளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    ×