search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மர்ம மரணம்"

    • ராஜி தலையில் காயம் அடைந்த நிலையில் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • ராஜி இறந்து கிடந்த இடத்தின் அருகே அவரது மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது.

    திருவொற்றியூர்:

    எர்ணாவூர், பாரத் நகரை சேர்ந்தவர் ராஜி (வயது 30). கூலித்தொழிலாளி. நேற்று இரவு அவர் எர்ணாவூர் ராமகிருஷ்ணாநகர் அருகே தலையில் காயம் அடைந்த நிலையில் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜி இறந்து கிடந்த இடத்தின் அருகே அவரது மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது. அவர் மோட்டார் சைக்கிளில் வரும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காண்டீபன் இரவு வீட்டில் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கினார்.
    • காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து காண்டீபன் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கீரப்பாக்கம், துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காண்டீபன் (வயது36). காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    காண்டீபன், இரவு வீட்டில் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கினார். அதிகாலை மனைவி பார்த்தபோது காண்டீபன் படுக்கையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காயார் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இரவு படுக்க செல்வதற்கு முன்பு உடல்நிலை பாதிப்புக்காக காண்டீபன் கீரப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இதன் பின்னர் அவர் மர்மமாக இறந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து காண்டீபன் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வினோத் குமாரின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் 2 பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடிகோட்டுரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 25).

    இவர் நேற்று முன்தினம் குப்பம் வந்தார். அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். சிறிது நேரத்தில் வினோத்குமாரின் அறைக்கு 2 இளம்பெண்கள் சென்றனர்.

    அன்று மாலை அறையில் தங்கியிருந்த 2 பெண்கள் வினோத் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு வினோத்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பெண்களும் வினோத்குமார் பிணத்தை அவரது பெற்றோர் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

    வினோத் குமாரின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் 2 பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வினோத்குமாரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×