search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கைது"

    • 14 வயது வடமாநில சிறுமியுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது
    • போலீசார் ஹரிசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    ஊட்டி

    ஊட்டியைசேர்ந்தவர் ஹரிஷ்(24). இவரது சகோதரி அருகே உள்ள ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இதனால் ஹரிஷ் அடிக்கடி தனது சகோதரி வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது அங்கு வசிக்கும் 14 வயது வடமாநில சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் ஆசை வார்த்தை கூறி அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர்கள் ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஹரிசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அவினாசி - மங்கலம் ரோடு மேம்பாலம் அருகே போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க வந்ததாக போலீஸ் நிலையத்தில் வேல்முருகன் புகார்,

    அவினாசி :

    அவினாசி போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருபவர் வேல்முருகன்(வயது 38). இவர் நேற்று அவினாசி மங்கலம் ரோடு மேம்பாலம் அருகே ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே அவினாசி காந்திநகரை சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ் (32) என்பவர் இரு சக்கர வாகனத்தில் குடிபோதையில் தாறுமாறாக வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது வேல்முருகன், பிரகாசை நிற்க சொன்ன போது போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க வந்ததாக போலீஸ் நிலையத்தில்வேல்முருகன் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார்வழக்குபதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

    ×