என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாட்ஸ்அப் கால்"
- செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்துள்ளது.
- கடந்த சில மாதங்களாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் (45). தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவராகவும், தெலங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ளார். மேலும் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார்.
மோகன் குமாரமங்கலம் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு பழைய விமான நிலையம் கோடிஹள்ளி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்துள்ளது. அப்போது அவருக்கு தெரியாமலேயே அந்த அழைப்பு ஏற்கப்பட்டது.
அப்போது சத்தம் கேட்டு அவர் தனது செல்போனை எடுத்து பார்த்தார். அப்போது அதில் ஒரு இளம்பெண் நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வீடியோ காலை உடனடியாக துண்டித்து விட்டார். மேலும் மோசடி கும்பல் மோகன் குமாரமங்கலத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து அவர் சாட்டிங் செய்தது போலவும், நிர்வாணமாக தோன்றிய பெண்ணின் வீடியோவை அவர் பார்ப்பது போன்றும் போலியாக தயாரித்து அவரை மிரட்டி பணம் கேட்டு உள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ரூ.6ஆயிரம் அந்த கும்பலுக்கு செலுத்தி உள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு அவரை மிரட்டினர்.
இதையடுத்து மோகன் குமாரமங்கலம் கடந்த 11-ந் தேதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மோகன் குமாரமங்கலத்தை மிரட்டி பணம் பறித்த கும்பல் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக பெங்களூரு பகுதியில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்