search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குசாவடி"

    • பேரூர் கழக செயலா ளர்கள் முரளி, எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
    • நலத்திட்ட உதவிகளின் விபரம் உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்வது குறித்து விளக்கமளித்தார்

    மாரண்டஅள்ளி,

    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க மேற்கு மாவட்ட வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பேரூர் கழக செயலாளர்கள் முரளி, எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மாநில தகவல் நுட்ப துணைசெயலாளர் மற்றும் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ் மாறன் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட தி.மு.க மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் உயர் கல்விதுறை அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்க ளுக்கு வாக்கா ளர்களின் விண்ணப்பங்களில் குடும்ப உறுப்பிணர்கள் விபரம், அரசிடம் இருந்து பெறும் நலதிட்ட உதவிகளின் விபரம் உள்ளிட்டவைகள் எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து பு விளக்கமளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வக்கில் மணி, மாவட்ட பொருளாளர் முருகன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சுப்ரமணி, ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட நெசவாளர் பிரிவு அமைப்பாளர் ராஜபார்ட் ரங்கதுரை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஹரிபிரசாத் மற்றும் பூத் கமிட்டி வாக்கு சாவடி முகவர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூர் கழக பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் பங்கேற்பு
    • தி.மு.க. வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் பூவியூர் பெரிய நாடார் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது

    தென்தாமரைகுளம், செப்.28-

    தென்தாமரைகுளம் பேரூர் தி.மு.க. வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் பூவியூர் பெரிய நாடார் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, ஒன்றிய பொருளாளர் எட்வின்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் மற்றும் மாநில வர்த்தகர் அணி இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர் மகேஷ், முன்னாள் பேரூர் செயலாளர் ஆல்வின் ஜெபசிங், கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்டபெருமாள் மற்றும் தென்தாமரைகுளம் பேரூர் கிளை செயலாளர்கள், பாக முகவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பேரூர் துணை செயலாளர் ஜெரி நன்றி கூறினார்

    • புதுக்கோட்டை வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியீடப்பட்டு உள்ளது
    • அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில்கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறையின்போது, வாக்குசாவடி மையங்கள் மறுசீரமைத்தல் குறித்து, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான விளக்கக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், வரைவு வாக்குசாவடி பட்டியலை, அவர் வெளியிட்டார்.

    வாக்காளர் பட்டியலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,62,655 ஆண் வாக்காளர்கள், 6,79,306 பெண் வாக்காளர்கள், 66 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13,42,027 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 1559 வாக்குச்சாவடி மையங்கள், 941 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. இதில் நகர எல்லைக்குள்85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக 77 இடம் மாற்றம், வாக்குச்சாவடி பிரிவு மாற்றம், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் என மொத்தம் 123 மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வாக்காளர் பதிவு அலுவலர்கள்வருவாய் கோட்டாட்சியர்கள் குழந்தைசாமி (இலுப்பூர்), ப.ஜஸ்டின் ஜெபராஜ் (அறந்தாங்கி), தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனை கருப்பையா மற்றும் ரெத்தினம் (தி.மு.க.), முகமது சேட் (அ.இ.அ.தி.மு.க.), அப்துல் ஜாபர் (ஆம் ஆத்மி கட்சி), எஸ்.வெங்கட்ராமன் (பாரதிய ஜனதா கட்சி), எஸ்.சங்கர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), சேதுராமன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மேயர் மகேஷ் ஆலோசனை வழங்கினார்
    • செப்டம்பர் 15-ந்தேதி முதல் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மண்டைக்காடு பருத்திவிளை ஆர்க் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தலைமை தாங்கினார். குளச்சல் சட்டமன்ற தொகுதி தலைமை கழக பார்வை யாளர் உசிலம்பட்டி அருண் முன்னிலை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் வரவேற்றார்.

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள் சகாய கிறிஸ்துதாஸ், செல்வதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயசீலன், செல்வதாஸ், டாக்டர் ஜாண் சந்திரசேகர், குளச்சல் சபீன் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள், அணிகளின் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொண்ட னர். ஒன்றிய பிரதிநிதி பால்டுவின் மேஷாக் நன்றி கூறினார்.

    வருகிற 17-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமில் குருந்தன் கோடு மேற்கு ஒன்றிய 103 வாக்குச்சாவடி முகவர்க ளும் கலந்து சிறப்பிப்பது. தி.மு.க. தேர்தல் அறிக்கை படி அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்ட தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • தஞ்சை மாநகரில் 51 வட்டங்களிலும் வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது.
    • முன்னோடிகளின் தலைமையில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மத்திய மாவட்ட மாநகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அவை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.

    மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உபயதுல்லா, டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இந்த கூட்டத்தில் மீண்டும் தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 1-ந் தேதி மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கும் மற்றும் உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கபட்டது.

    நவம்பர் 27-ந் தேதி உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகரம் 51 வட்டங்களிலும் நிர்வாகிகளை கொண்டு முன்னோடிகளின் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். தஞ்சை மாநகரம் 51 வட்டங்களிலும் வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது, உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்படி இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்து தஞ்சை மாநகரம் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் காரல்மார்க்ஸ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஜித்து, மாநில பிரசார குழு உறுப்பினர் கார்குழலி, முன்னாள் எம்.பி. பரசுராமன், மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, மாவட்ட பொருளாளர் அண்ணா, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, தர்மராசன், மாநகர நிர்வாகிகள் துணை செயலாளர்கள் எழில், உஷா, காளையார் சரவணன், பகுதி செயலாளர்கள் சந்திரசேகர மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் சண்முகசுந்தரம், கமலாரவி, செந்தமிழ்செல்வன், மண்டல குழு தலைவர்கள் ரம்யாசரவணன், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்மாநகர துணை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது.
    • பொது மக்கள் வாக்காளர் அடை யாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் செப்டம்பர் 4-ந்தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் செம்மையாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தக வல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது.

    இது தொடர்பாக பொது மக்கள் வாக்காளர் அடை யாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் செப்டம்பர் 4-ந்தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    எனவே கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மேற்படி சிறப்பு முகாம் அன்று தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×