search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்
    X

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்

    • மேயர் மகேஷ் ஆலோசனை வழங்கினார்
    • செப்டம்பர் 15-ந்தேதி முதல் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மண்டைக்காடு பருத்திவிளை ஆர்க் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தலைமை தாங்கினார். குளச்சல் சட்டமன்ற தொகுதி தலைமை கழக பார்வை யாளர் உசிலம்பட்டி அருண் முன்னிலை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் வரவேற்றார்.

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள் சகாய கிறிஸ்துதாஸ், செல்வதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயசீலன், செல்வதாஸ், டாக்டர் ஜாண் சந்திரசேகர், குளச்சல் சபீன் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள், அணிகளின் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொண்ட னர். ஒன்றிய பிரதிநிதி பால்டுவின் மேஷாக் நன்றி கூறினார்.

    வருகிற 17-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமில் குருந்தன் கோடு மேற்கு ஒன்றிய 103 வாக்குச்சாவடி முகவர்க ளும் கலந்து சிறப்பிப்பது. தி.மு.க. தேர்தல் அறிக்கை படி அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்ட தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×