search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்முறை உச்ச நீதிமன்றம்"

    • ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர்.

    ஈரோடு:

    இந்திய முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வட மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் ரெயில் பெட்டிகள் எரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் ரெயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இளைஞர்கள் கூட்டமாக சென்றால் அவர்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர். இளைஞர்கள் போராட்டம் நடத்துவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேப்போல் ரெயில் நிலையத்திற்குள்ளும் ஈரோடு ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில்களையும் பெட்டி பெட்டியாக சென்று சோதனை செய்கின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று அக்னிபாத் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்திடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, காளைமாடு சிலை, ரெயில் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, பஸ் நிலையம், சுவஸ்தி கார்னர், பஸ் டிப்போ, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற நகரின் முக்கியமான பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி, கவுந்தபாடி, நம்பியூர் மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • ரெயில் நிலையம் நோக்கி வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    மதுராந்தகம்:

    ராணுவத்தில் புதிதாக கொண்டுவரப்பட்டு உள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களில் கூடுதல் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை யில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர். அவர்கள் ரெயில் நிலையம் நோக்கி வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கேயே அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வன்முறையால் 12 ரெயில்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.
    • அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    பாட்னா:

    ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையானது.

    குறிப்பாக பீகார் மாநிலத்தில்தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வன்முறையால் 12 ரெயில்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதை அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராணுவத்தில் குறுகியகால ஆள் சேர்ப்பு திட்டம் நாட்டின் இளைஞர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்த திட்டத்துக்கு எதிராக தெருக்களில் போராட்டம் நடத்துபவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சூரக் பஸ்வான் கூறும்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று இன்று கவர்னரை சந்தித்து அன்கினிபத் திட்டத்தை திரும்ப பெற கோரி மனு கொடுக்க உள்ளோம். அக்னிபத் திட்டம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும். இது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கும் என்றார்.

    • நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • ரெயில் நிலைய உள்புறமும், வெளிபுறமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை:

    மத்திய அரசின் அக்னிபத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பீகார் மாநிலம் சமஸ்திபூரில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர்.தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையத்திலும் ரெயில் பெட்டிகளுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்திலும் நேற்று முதல் பல்வேறு அமைப்பினர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவையில் ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளதால் யாரும் கலவரத்தில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதால் கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ரெயில்வே இன்ஸ்பெக்டர் தலைமையில் 10க்கும் அதிகமான போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் அனைவரையும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். நுழைவு வாயில் முன்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலைய உள்புறமும், வெளிபுறமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பீகார் மாநிலத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முைறயில் ஈடுபட்டுள்ளனர்.
    • நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    பாட்னா:

    ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையானது.

    குறிப்பாக பீகார் மாநிலத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முைறயில் ஈடுபட்டுள்ளனர்.

    பீகார், உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் போராட்டம் பரவி உள்ளது.

    நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. தெலுங்கானாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். போராட்டம் காரணமாக 340-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை பாதிக்கப்பட் டது. 234 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.

    இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக வட மாநிலங்களில் நீடித்தது.

    இந்த நிலையில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த முழு அடைப்பின் போது பீகாரில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இன்று காலை போராட்டக்காரர்கள் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை தீவைத்து எரித்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதே போல போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பீகாரில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    ஜெகனாபாத்தில் போலீஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அங்கு போலீசார் மீதும் கல்வீச்சும் நடந்தது. இந்த முழு அடைப்பு காரணமாக கயா, புக்சர், ஜெகனாபாத் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 12 மாவட்டங்களில் இணைய தள சேவை முடக்கப்பட்டு இருந்தது. முன்கர் பகுதியில் மாணவர்கள் டயர்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதை அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராணுவத்தில் குறுகியகால ஆள் சேர்ப்பு திட்டம் நாட்டின் இளைஞர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்த திட்டத்துக்கு எதிராக தெருக்களில் போராட்டம் நடத்துபவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராஜ் பஸ்வான் கூறும்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று இன்று கவர்னரை சந்தித்து அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற கோரி மனு கொடுக்க உள்ளோம். அக்னிபாத் திட்டம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும். இது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கும் என்றார்.

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்றைய போராட்டத்தின் போது ரெயில் நிலையம் சூறையாடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இதே போல அரியானாவில் 15 பேர் கைதாகி உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஜவுன்பூரில் போராட் டக்காரர்கள் பஸ்கள் மற்றும் போலீஸ் வேன்களை தாக்கி தீ வைத்து எரித்தனர்.

    பஞ்சாப் மாநிலத்திலும் இன்று வன்முறை பரவியது. லுதியானாவில் ரெயில் நிலையத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினார்கள். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    • மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • வடமாநிலங்களில் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் கல்வீச்சு.

    புதுடெல்லி:

    அக்னிபாத் ராணுவ திட்டத்துக்கு பீகார் மாநிலத்தில் தான் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு அது பக்கத்து மாநிலங்களிலும் பரவியது.

    கடந்த 3 நாட்களாக வட மாநிலங்களில் அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்தது. இன்று 4-வது நாளாக போராட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

    15 மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் இன்று ஏராளமான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைமை செயலகம் அருகே அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வடமாநிலங்களில் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க முற்பட்ட போது போலீசார் ஒருவர் பலியா னார். இந்த நிலையில் பீகாரில் நேற்று ஒரு ரெயிலுக்கு தீவைக்கப்பட்ட போது ரெயில் பெட்டிக்குள் ஒரு பயணி சிக்கிக் கொண் டார்.

    புகை மூட்டத்துக்குள் இருந்து தப்ப முடியாத அவர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். 40 வயதான அவர் சிறிதுநேரத்தில் அந்த ரெயில் பெட்டுக்குள்ளேயே உயிரிழந்தார்.

    இதனால் போராட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந் துள்ளது.

    ×