search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கிக்கடன் மோசடி"

    நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா கூறியதற்கு அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். #VijayMallaya #ArunJaitley
    லண்டன்:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான விஜய் மல்லையா “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார்.

    இந்நிலையில், விஜய் மல்லையா கூற்று தொடர்பாக அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது. 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால், பாராளுமன்றத்தில் அவரை சந்தித்ததுண்டு. 

    பிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு பாராளுமன்ற வளாகத்தில் என்னிடம் ஒருமுறை உதவிகோரினார். தன்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறித்தினேன். எம்.பி., பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தியுள்ளார். 

    இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    வங்கி மோசடி விவகாரத்தில் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. #VijayMallaya
    லண்டன்:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது மும்பை ஆர்தர் சாலை சிறையின் வீடியோவை லண்டன் கோர்ட் நீதிபதி கேட்டதன் பேரில், இந்தியா தாக்கல் செய்தது.

    இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மல்லையா ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறினார்.

    “என் மீதான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். எனினும், கோர்ட் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” எனவும் மல்லையா குறிப்பிட்டார்.

    முன்னதாக, வழக்கு விசாரணையின் போது, “சிபிஐ கொடுத்த நிர்பந்தம் காரணமாகவே மல்லையா மீது வங்கிகள் புகார் அளித்தது” என மல்லையா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.  

    வழக்கு விசாரணை முடிந்த பின்னர், நாடு கடத்தக்கோரும் வழக்கின் மீதான தீர்ப்பு டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். 
    வங்கிக்கடன் மோசடியில் சிக்கி ஆண்டிகுவாவில் தற்போது வசிக்கும் மெஹுல் சோஸ்கியை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா அந்நாட்டு அரசிடம் முறைப்படி கோரிக்கை சமர்பித்துள்ளது. #MehulChoksi
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இண்டெர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவில் இருந்த மெஹுல் சோஸ்கி கடந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இண்டெர்போல் அளித்த நோட்டீசுக்கு ஆண்டிகுவா அரசு பதில் தெரிவித்தது. 

    மெஹுல் சோஸ்கிக்கு குடியுரிமை வழங்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் இந்திய விசாரணை அமைப்புகள் மெஹுல் சோஸ்கிக்கு உதவியதால் ஆண்டிகுவா அரசு குடியுரிமை வழங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. 

    இதற்கிடையே, சோஸ்கியை இந்தியா கொண்டு வருவதற்கு சிபிஐ உள்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி கோரிக்கை விடுத்தது. உள்துறை அமைச்சகம் இதற்கான கடிதத்தை வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியது. 

    இந்நிலையில், சோஸ்கியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆண்டிகுவா அரசுக்கு முறைப்படி மத்திய அரசு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    வங்கியில் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மெஹுல் சோஸ்கிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இந்திய விசாரணை அமைப்புகள் கேட்டுக்கொண்டதாக ஆண்டிகுவா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. #MehulChoksi #PNBScam
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். 

    இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இண்டெர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவில் இருந்த மெஹுல் சோஸ்கி கடந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இண்டெர்போல் அளித்த நோட்டீசுக்கு ஆண்டிகுவா அரசு பதில் தெரிவித்தது. 

    இந்நிலையில், மெஹுல் சோஸ்கிக்கு குடியுரிமை வழங்கப்பட்டது தொடர்பான பல்வேறு தகவல்களை டெய்லி அப்சர்வர் என்ற அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில், பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


    2018 ஏப்ரலில் ஆண்டிகுவா பிரதமரை சந்தித்த மோடி

    அதாவது, இந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி பிஎன்பி மோசடி குறித்த புகார் சிபிஐ.யில் அளிக்கப்படுகிறது. ஆனால், 4-ம் தேதியே மெஹுல் சோஸ்கி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். 15-ம் தேதி ஆண்டிகுவா நாட்டின் குடிமகனாக அவர் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே மெஹுல் சோஸ்கிக்கான குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு ஆண்டிகுவா அரசு குடியுரிமை அளித்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் மெஹுல் சோஸ்கி மற்றும் அவரது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பெங்களூரை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு விரிவான புகார் அளித்துள்ளார். 

    ஹரி பிரசாத் புகார் அளித்த மூன்று மாதங்கள் கழித்து மெஹுல் சோஸ்கிக்கு ஆண்டிகுவா அரசு குடியுரிமை அளித்துள்ளது. மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் சோஸ்கி ஆண்டிகுவா சென்று பாஸ்போர் வரை பெற்ற பின்னரே வெளியே கசிய தொடங்கியது.

    ஆண்டிகுவாவில் சோஸ்கி குடியேறினாலும், அவர் மீது பாதகமான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என இந்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை கேட்டுக்கொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி பெற்று மோசடி செய்த மெஹுல் சோஸ்கி அமெரிக்காவில் இருந்து ஆன்டிகுவா சென்றுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. #MehulChoksi #PNBScam
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். 

    இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இண்டெர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவில் இருந்த மெஹுல் சோஸ்கி இந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இண்டெர்போல் அளித்த நோட்டீசுக்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முதல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட நிரவ்மோடி ஹாங்காங்கில் இருப்பதாகவும், அங்கிருந்து அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
    ×