search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோசடி"

    • ஜெயலட்சுமிக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த நபரை உதவிக்கு அழைத்தார்.
    • மர்மநபர் வேறொரு ஏ.டி.எம். கார்டை ஜெயலட்சுமியிடம் கொடுத்து விட்டு சென்றார்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்ஐஎச்எஸ் காலனி பெத்தேல் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பழனி முருகன். இவரது மனைவி ஜெயலட்சுமி(60).

    இவர் கடந்த 15-ந் தேதி பணம் எடுப்பதற்காக சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த ஒரு நபரை உதவிக்கு அழைத்தார்.

    அந்த நபர் அவரிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் ஏ.டி.எம். கார்டு வேலை செய்யவில்லை என கூறி மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு வேகமாக சென்று விட்டார்.

    இதனையடுத்து ஜெயலட்சுமியும் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அந்த மர்மநபர் வேறொரு ஏ.டி.எம். கார்டை ஜெயலட்சுமியிடம் கொடுத்து விட்டு அவரது ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.

    • பால்பண்ணை உரிமையாளரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்துள்ளனர்.
    • ரூ.10½ லட்சம் மோசடி செய்ததாக நிசார் சுக்கன், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்்த்தி (வயது45). இவர் அதே பகுதியில் பால்பண்ணை நடத்தி வருகிறார். இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீட்டை சேர்ந்த நிசார்சுக்கன், தனது கம்பெனிக்கு ஒப்பந்த அடிப்படையில் பாைல கொள்முதல் செய்து வந்தார்.

    அதன்படி நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் பாலை சுந்தரமூர்த்தி சப்ளை செய்தார். கடந்த 6 மாதத்தில் பாலை சப்ளை செய்ததில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் பெற வேண்டியுள்ளது. ஆனால் பணத்தை தராமல் நிசார்சுக்கன், அவரது கம்பெனி மேலாளர் சுப்பிரணமணியன் ஆகியோர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சுந்தரமூர்த்தி ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு நடவடிக்கை எடுக்குமாறு ேபாலீசாருக்கு உத்தரவிட்டது.

    அதன்அடிப்படையில் கிருஷ்ணன்கோவில் போலீசார் ரூ.10½ லட்சம் மோசடி செய்ததாக நிசார் சுக்கன், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சரவணகுமார் இந்து அறநிலையத்துறையில் வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • கலைச்செல்வி இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை அருகே உள்ள ராக்கிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் கலைச்செல்வி (வயது 30). இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது கலைச் செல்விக்கு பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் இளம்பெண்ணிடம் தான் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறினார்.

    மேலும் இந்து அறநிலையத்துறையில் வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார்.

    இதனை உண்மை என நம்பிய கலைச்செல்வி ரூ.23 லட்சம் பணத்தை தயார் செய்து சரவணகுமாரிடம கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட இவர் போலியான ஆவணங்களை தயார் செய்து பணி நியமன ஆணையை கலைச்செல்வியிடம் கொடுத்தார். அதனை இந்து அறநிலை யத்துறை அலுவலகத்துக்கு சென்று சரி பார்த்த போது அது போலியானது என்பது தெரியவந்தது.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலைச்செல்வி இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இந்து அறநிலையத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த சரவண குமார் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள்.

    • தனியார் பாலிடெக்னிக்கில் ரூ.41 ½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கல்லூரி நிர்வாக குழு தலைவர் சுதர்சன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் எங்களது கல்லூரியில் 2017-18, 2019-20 ஆகிய ஆண்டின் கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை ஆய்வு செய்த போது கல்லூரியில் கணக்காளராக பணிபுரிந்த சிவகாசி செங்கமலநாச்சியாபுரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஜோசப் லயோலா (47) மற்றும் சிவகாசி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த செல்வசுதா (35) ஆகியோர் ரூ.48 லட்சத்து 5 ஆயிரத்து 863 மோசடி செய்துள்ளனர்.

    இது தொடர்பாக 2 பேரிடமும் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஜோசப் லயோலா ரூ.6 லட்சத்தை திருப்பி கொடுத்து விட்டார். மீதமுள்ள 41 லட்சத்து 51 ஆயிரத்து 863 ரூபாயை 2 பேரும் மோசடி செய்து விட்டனர் என கூறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பணம் மோசடி செய்த ஜோசப் லயோலா, செல்வசுதா ஆகிய 2 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகேசன்-மீனா தம்பதியினர்மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் நேதாஜி சாலையில் ஐஸ்வர்யா தங்க மாளிகை என்ற பெயரில் நகை சிறுசேமிப்பு திட்டங்கள் நடத்தி வந்துள்ளனர்.
    • முதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாத காலத்திற்குள் இருமடங்காக பணம் தரப்படும் என்றும், 2 மாதங்களுக்கு ஒருமுறை அந்த பணத்திற்கான உறுதிச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

    திருச்சி,

    திருச்சி விக்னேஷ் அபார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வந்தவர்கள் முருகேசன்-மீனா தம்பதியினர். இவர்கள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் நேதாஜி சாலையில் ஐஸ்வர்யா தங்க மாளிகை என்ற பெயரில் நகை சிறுசேமிப்பு திட்டங்கள் நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாத காலத்திற்குள் இருமடங்காக பணம் தரப்படும் என்றும், 2 மாதங்களுக்கு ஒருமுறை அந்த பணத்திற்கான உறுதிச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

    அதற்கான தொகையினை பணமாகவோ, நகையாகவோ எடுத்துக்கொள்ளலாம் என்று நம்பகமான ஆசை வார்த்தைகளையும் கூறியுள்ளனர். அதனை நம்பி ஏராளமானோர் முதலீடும் செய்துள்ளனர். ஆனால் முதிர்வு காலம் முடிந்த நிலயைில் பணத்தை திருப்பித்தராமல் தம்பதியினர் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே ஐஸ்வர்யா தங்க நகை மாளிகை என்ற பெயரில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் யாராவது இருந்தால் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் மதுரை தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிறுத்தம் எதிர்புறம், சங்கரபாண்டியன் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்பேரில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

    • உங்கள் நகைகளை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம்.
    • சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த மர்மநபர்களிடம் கொடுத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 60). சம்பவத்தன்று இவர் மயிலாடுதுறை சென்று விட்டு தஞ்சைக்கு பஸ்சில் வந்தார்.‌

    பின்னர் தற்காலிக மார்க்கெட் அருகே உள்ள ஏ.ஓய். நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், சரஸ்வதியின் அருகில் மோட்டார் சைக்கிளில் நிறுத்தினர்.

    இங்கு திருட்டு சம்பவம் அதிகமாக நடக்கிறது. இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு செல்லாதீர்கள். உங்கள் நகைகளை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம் என சரஸ்வதியிடம் கூறினர். இதனை உண்மை என்று நம்பிய சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த மர்ம நபர்களிடம் கொடுத்தார்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த மர்ம நபர்கள் நகைகளுக்கு பதிலாக ஒரு கல்லை அந்தப் பையில் மறைத்து வைத்து கொடுத்தனர். அந்தப் பையுடன் வீட்டுக்கு சென்ற சரஸ்வதி அவிழ்த்து பார்த்த போது நகைகளுக்கு பதிலாக கல்லை ஏமாற்றி வைத்து தன்னை மர்மநபர்கள் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×