search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்கள் விலை"

    • பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
    • மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வரத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    வழக்கமாக கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல சங்கரா மீன் 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், நெத்திலி மீன் 200 ரூபாய்க்கும், நண்டு கிலோ 300 ரூபாய்க்கும், சிறிய வகை இறால் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் 400 ரூபாய்க்கும், பாறை 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • மீன்பிடி தடைகாலம் இருந்ததால் கடந்த 2 மாதமாக காசிமேடு மார்க்கெட் களை இழந்து காணப்பட்டது.
    • மீன்விற்பனை களை கட்டியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து 14-ந்தேதி நள்ளிரவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் புறப்பட்டனர்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். வழக்கமாக வாரவிடுமுறை நாட்களில் காசிமேட்டில் மீன்வாங்க அதிக அளவிலான மீன்பிரியர்கள் குவிவார்கள். மீன்பிடி தடைகாலம் இருந்ததால் கடந்த 2 மாதமாக காசிமேடு மார்க்கெட் களை இழந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மீன்பிடி தடைகாலம் முடிந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவிலான பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதையடுத்து இன்று அதிகாலை முதலே காசிமேட்டில் ஏராளமான மீன்பிரியர்கள் குவிந்தனர். இதனால் மார்க்கெட் முழுவதும் கூட்டம் அலை மோதியது. மீன்விற்பனையும் களை கட்டியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆனால் இன்று குறைந்த அளவிலான விசைப்படகுகளே கரை திரும்பியதால் எதிர்பார்த்த அளவு பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை.

    சிறியவகை வஞ்சிரம், சங்கரா, இறால், கடமா, வவ்வால், பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு குவிந்து இருந்தது. பெரிய வகை மீன்கள் எதுவும் விற்பனைக்கு வராததால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனினும் மற்ற வகை மீன்கள் அதிகம் குவிந்து இருந்ததால் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

    ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் சுமார் 15 நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன்பிடிப்பார்கள். எனவே அடுத்த வாரத்தில் பெரும்பாலாள விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பெரிய வகை மீன்கள் அதிகஅளவில் விற்பனைக்கு வரும் எனவும், விலையும் குறையும் என்றும் தெரிகிறது.

    காசிமேட்டில் இன்று காலை வஞ்சிரம் கிலோ ரூ. 950-க்கும், சங்கரா ரூ.700, இறால் ரூ.600, வவ்வால் மீன்-ரூ.300 முதல் ரூ.600 வரை, கடமான் ரூ.600, பாறை ரூ.350-க, நெத்திலி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • சென்னையில் முக்கிய மீன்பிடி துறைமுகமான காசிமேட்டில் தினமும் ஆயிரக்கணக்கான எந்திர படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள்.
    • காசிமேடு மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருவார்கள்.

    சென்னை:

    மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் கிழக்கு கடற்கரை பகுதிகளில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஜூன் 16-ந்தேதி வரை 61 நாட்கள் அமலுக்கு வந்தது.

    சென்னையில் முக்கிய மீன்பிடி துறைமுகமான காசிமேட்டில் தினமும் ஆயிரக்கணக்கான எந்திர படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள்.

    காசிமேடு மீன் என்றாலே அது தனி சுவை. எந்த கலப்படமும் இல்லாதது. தரமானது. எனவே காசிமேடு மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருவார்கள்.

    இந்தநிலையில் தடைக்காலம் தொடங்கியதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்றே விலை ஏறியது. நேற்று ரூ.800-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ரூ.1000-ம் ஆகவும், சங்கரா ரூ.350-ல் இருந்து ரூ.400 ஆகவும், இறால் ரூ.300-ல் இருந்து ரூ.400 எனவும் மீன்களின் விலை ஏறியது.

    காசிமேடு மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றும் ஏராளமானோர் மீன் வாங்க திரண்டனர்.

    தடை காலத்தில் விலை உயர்வது குறித்து காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர் சவுந்தர் கூறியதாவது:-

    காசிமேட்டில் விற்கப்படும் மீன்கள் தரமாகவும், ருசியாகவும் இருப்பதால் இங்கு மீன் வாங்க போட்டி போட்டு வருவார்கள். தடைக்காலங்களில் மீன்களின் வரத்து குறைவதால் பைபர் மற்றும் கட்டுமரங்களில் வரும் மீன்களே. மார்க்கெட்டில் விற்கப்படும்

    இனி நாட்கள் செல்லச் செல்ல விலை அதிகரித்து அடுத்த வாரத்தில் 30 சதவீதம் வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களுக்கான நிவாரணத்தொகை மீனவர்கள் நலன் கருதி ரூ.5000-ல் இருந்து ரூ.8000 மாக அதிகரித்து தர அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வஞ்சிரம் ரூ.850க்கு விற்பனையானது.
    • அதிகளவு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கோவை,

    கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மீன் மார்க்கெட்டிற்கு ராமேஸ்வரம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து அதிகளவு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்தவர்கள் மீன் மார்க்கெட்டிற்கு வந்து தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி செல்கின்றனர். இதனால் எப்போதும் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகமான மக்கள் மீன் வாங்குவதற்காக மார்க்கெட்டிற்கு வருவார்கள். இதனால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவியத் தொடங்கினர். அவர்கள் மார்க்கெட்டில் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர்.

    வெயில் காலம் தொடங்கி உள்ளதால் தற்போது மீன்கள் வரத்து சற்று குறைவாக உள்ளது. இதன் காரணமாக உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    கடந்த மாதம் ரூ.750க்கு விற்பனையான வஞ்சிரம் மீன் விலை ரூ.100 உயர்ந்து கிலோ ரூ.850க்கு விற்பனையாகிறது.

    இன்று உக்கடம் மீன்மார்க்கெட்டில் விற்பனையாகும் மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    அயிரை மீன்-ரூ.100, விலா-ரூ.450, வஞ்சிரம்-ரூ.850, மத்தி-ரூ.140, வாளை-ரூ.800, ஊளி-ரூ.400, இறால்-ரூ.500, பாறை-ரூ.400, நண்டு-ரூ.700, கிழங்கான்-ரூ.150க்கு விற்பனையாகியது.

    இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறும் போது, தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால் மீன் பிடிப்பது குறைந்து விடும். இதனால் மார்க்கெட்டிற்கும் வரத்து சற்று குறைந்து வருகிறது. இதனால் மீன்கள் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது என தெரிவித்தார்.

    ×