search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனாட்சி கோவில்"

    • குலசேகரன் கோட்டை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக கால்கோள் விழா நடந்தது.
    • இதில் திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் உள்பட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன் கோட்டையில் சிறுமலை ஓடைக்கரையில் 800 ஆண்டு பழமையும், பெருமையும் வாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 72 அடி உயர ராஜகோபுரம், விநாயகர், முருகன், பிரம்மதேவர், சூரியபகவான், சந்திர பகவான் ஆகியவற்றிற்கும், மீனாட்சி- சுந்தரேசுவரர் சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கும்பா பிஷேகத்திற்கான கால்கோள் விழா நடந்தது. இதில் திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் உள்பட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் மீனாட்சிஅம்மன் கோவில் முன்பு தேங்கிய சாக்கடை நீர் அகற்றப்பட்டது.
    • அடிக்கடி கோவில் வாசல் பகுதியில் சாக்கடை கொப்பளித்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் மத்தியில் மன உளைச்சல் ஏற்படுள்ளது.

    மதுரை

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக அங்கு எந்த நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை கிழக்கு கோபுர வாசல் பகுதியில் திடீரென பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. பக்தர்கள் அந்த வழியாக செல்லவும், கோவிலுக்குள் செல்லவும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் அதற்கான வாகனங்களை எடுத்து வந்து கழிவு நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேரம் நடந்த பணிகளை தொடர்ந்து சாக்கடை அகற்றப்பட்டது.

    ஏற்கனவே சில நாட்க ளுக்கு முன்பும் இதே பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கியது. எனவே கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் பணிகளை தரமான முறையில் செய்ய வேண்டும் என்றும், கழிவு நீர் கோவில் சுற்றுப்புறங்களில் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அடிக்கடி கோவில் வாசல் பகுதியில் சாக்கடை கொப்பளித்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் மத்தியில் மன உளைச்சல் ஏற்படுள்ளது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலுக்கு தனியார் நிறுவனம் சார்பில் www.maduraimeenakshi.org இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. அது இப்போது மூடப்பட்டு விட்டது. தமிழக அரசு சார்பில் https://maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இருந்த போதிலும் பழைய இணையதளம் மூலம் புதிய இணையத்தை பார்வையிடலாம். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவிலுக்கு நன்கொ டை மற்றும் உபய சேவை கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம். அரசு இணையதள முகவரி தவிர கோவிலுக்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா வருகிற 12ந் தேதி நடக்கிறது.
    • சுந்தரானந்தர் குருபூஜை விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மதுரை

    தமிழ் மரபில் பதினெண் சித்தர்களுள் ஒருவர்- சுந்தரானந்தர். இவர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். சட்டைமுனி சித்தரின் சீடர். அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி, சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். 'வாக்கிய ஆத்திரம், வைத்தியத்திரட்டு, தீட்சா விதி, சிவயோகஞானம் போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா, பழைய திருக்கல்யாண மண்ட பத்தில் வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்க உள்ளது. அப்போது சுந்தரானந்த சித்தருக்கு திருமுறை பாராயணம், புஷ்பாஞ்சலி நடக்க உள்ளது.

    இதனைத்தொடர்ந்து "எல்லாம் வல்ல சித்தர்கள்" என்ற தலைப்பில் பேராசிரியர் ஞானச ம்பந்தன் சொற்பொழிவாற்றுகிறார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரத்தை கவுரவித்து பணமுடிப்பு பழகுகிறார். அதன் பிறகு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சுந்தரானந்தர் குருபூஜை விழா நிகழ்ச்சியில் அமைச்ச ர்கள் மூர்த்தி, சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை முதல் வைகாசி வசந்த உற்சவம் நடைபெறுகிறது.
    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நாளை (3-ந்தேதி) முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. அதன்படி 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமிகள் புறப்பாடு மாலை 6 மணி அளவில் நடக்கும். அப்போது சுவாமிகள் கோவிலில் இருந்து புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வரும் உற்சவம் நடக்கும்.

    12-ந்தேதி அன்று சுவாமிகள் காலையில் புது மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு பகல் முழுவதும் தங்கி சுவாமிகள் அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடக்கும்.

    முன்னதாக 16-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை  திருஞானசம்பந்தர் திருவிழா நடக்கும். 18-ந்தேதி காலையில் ஞானசம்பந்தர் தங்கப்பல்லக்கில் எழுந்த ருளி, 63 நாயன்மார்களு டன் 4 ஆவணி மூல வீதி புறப்பாடு நடக்கும். அன்று இரவு 8 மணி அளவில் திருஞான சம்பந்தர் சுவாமிகள் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி, நான்கு ஆவணி மூல வீதிகளிலும் திருவீதி உலா நடக்கும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை வைகாசி வசந்த உற்சவம் திருவிழா நடப்பதால், அன்றைய நாட்களில் திருக்கோவில் சார்பாக உபய தங்க ரதம், திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படாது.

    மேற்கண்ட தகவலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளது.

    ×