search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்களுக்கு தடை"

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
    • மழை நின்ற பின்னர் மீண்டும் கடலுக்கு செல்ல மீனவர்களூக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது

    புதுக்கோட்டை,

    வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியான ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் இன்று (புதன்கிழமை) முதல் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மழை நின்ற பின்னர் மீண்டும் கடலுக்கு செல்ல மீனவர்களூக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • நாட்டுப்படகு மீனவர்களுக்கும் தடை செய்யப்பட்டது
    • கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தென் தமிழக கடற்கரை பகுதியில் 45 முதல் 55 வரையிலும், அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதியில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருகிறது.
    • கடல் இன்று 4 -வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருவதால், கடலோர கிராமங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடல் இன்று 4 -வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால், காரைக்காலில் இருந்து மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லா ததால், பெரும்பாலுமான விசை ப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. பைபர் படகுகள் காரைக்கால் அரசலாற்றின் கரையோரமும், மீனவ கிராமங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×