search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் வீடு"

    • தொண்டி அருகே மீனவர் வீட்டில் 8 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
    • இது தொடர்பாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடலோர கிராமமான சோழியக்குடி எம்.வி பட்டிணத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 50).

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த 8 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடினர். தொடர்ந்து வீட்டில் இருந்த சாவியை எடுத்து வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து தொண்டி போலீசில் சுப்ரமணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கொள்ளையர்களின் கைரேகைகள் தடயவியல் நிபுணர்களால் சேகரிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டிய மீனவர் வீட்டில், பெட்டி பெட்டியாக பழைய தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருக்கும் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன். இன்று பிற்பகலில் தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட அவர் குழி தோண்டியுள்ளார். 5 அடி தோண்டியதும் பெட்டி பெட்டியாக பழைய தோட்டாக்கள் கிடைத்துள்ளது.

    இதனை அடுத்து, போலீசாருக்கு எடிசன் தகவல் கூறியுள்ளார். இதனை அடுத்து, போலீசார் அங்கு வந்து குழியை மேலும் தோண்டி பழைய தோட்டாக்களை கைப்பற்றினர். மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
    ×