search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் விளக்கு"

    • தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • கடந்த சில நாட்களாக உயர் மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை.

    பல்லடம்:

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டும்.

    இதற்கிடையே பல்லடம் நால்ரோடு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அந்த விளக்குகள் சில நாட்கள் எரிவதும், அதற்குப் பின் பழுதாவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாக உயர் மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை. இதனால் நால்ரோடு பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் விளக்குகளை சுற்றி ஈசல்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன.
    • வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கோடை மழை அவ்வப்போது மாவட்டம் முழுவதும் பெய்து வருகிறது.

    சில நாட்களாக இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் மின்விளக்குகள் எரிய விடும் நேரத்தில் அந்த மின் விளக்குகளை சுற்றி ஈசல்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன.

    குறிப்பாக மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் பம்மம் முதல் குழித்துறை வரை ஈசல் கூட்டம் படையெடுத்து வந்து மார்தாண்டம் மேம்பாலம், தாமிரபரணி ஆற்றுப்பாலம், கடைகள், வீடுகள் என அனைத்து பகுதிகளிலும் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகளை ஆக்கிரமித்து கொண்டது.

    இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஈசல் கூட்டம் காரணமாக வாகனங்களை ஓட்டமுடியாமல் நிலை தடுமாறினார்கள். பல கடைகளில் ஈசல் கூட்டத்திலிருந்து தப்பிக்க மின்விளக்குகளை அணைத்திருந்தனர். இதனால் இந்த பகுதியில் சிறிது பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    • இப்பகுதி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்து வருகின்றது.
    • மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் பகுதியில் வேணுகோபாலபுரம் வடக்கு, தெற்கு, சுதர்சனம் தெரு, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள், பள்ளிக்கூடங்கள் இருந்து வருவதால் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ள நிலையில் தெரு மின்விளக்குகள் எரியவில்லை. இதன் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் அடையாளம் தெரியாத புதுப்புது நபர்கள் மின்விளக்கு எரியாமல் இருளில் உள்ளதால் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள், கடைகள் போன்றவற்றை அடைத்து விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைகள் மற்றும் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் அடிப்படை தேவையான தெரு மின்விளக்குகள் இல்லாத நிலையில், இந்த பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்று விடுவோமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இரவு நேரங்களில் வெளியில் வர முடியாத சூழ்நிலை காரணமாக யாருக்கேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும், அசம்பாவிதம் நடைபெற்றாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாநகராட்சி அதிகாரிகளும் பலமுறை புகார் அளித்தும் அடிப்படை தேவையான தெரு மின்விளக்குகள் சரியான முறையில் பொருத்தப்ப டாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்து வருகின்றன என பொதுமக்கள் குமறி வருகின்றனர்.

    ஆனால் மாநகராட்சி ஊழியர்களோ எதை பற்றியும் அச்சப்படாமல் பொதுமக்கள் புகார் அளித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற அலட்சியமான பதில்களை எப்போதும் தெரிவித்து வருவதால் இது சம்பந்தமாக யார் நடவடிக்கை எடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு மின்விளக்குகள் உடனடியாக பொருத்தி குற்ற சம்பவங்கள் நடைபெ றாமலும், விபத்துக்கள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவங்களால் அந்த பகுதி

    • மீனவர்களின் வசதிக்காக கடற்கரை ஓரம் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்பு பல இலட்ச ரூபாய் செலவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கபட்டது.
    • எந்த கோரிக்கையும் ஏற்கப்படாமல் விழுந்த மின்கம்பம் நான்கு ஆண்டுகளாக கடற்கரையில் அப்படியேவிழுந்த படிகிடக்கிறது.

    வேதாரண்யம் அக்12-

    வேதாரண்யம் தாலுகா விழுந்தமாவடி மீனவர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர்

    நாள்தோறும் பைபர் படகில் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்மீனவர்களின் வசதிக்காக கடற்கரை ஓரம் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்பு பல இலட்ச ரூபாய் செலவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கபட்டது.

    இந்த உயர்கோபுர மின்விளக்கால் கடற்கரை முழுவதும் இருள் இல்லமால் மீனவர்களுமிகுந்த பயனுள்ளதாக இருந்தது மேலும் இந்த மின்கோபுர விளக்கின் வெளிச்சத்தை அடையாளம் வைத்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கரை திரும்பினர் இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில்இந்த மின் கோபுர விளக்கு முறிந்து விழுந்தது

    கடந்த நான்கு ஆண்டுகளாக விழுந்த மின்கம்பத்தை சீர் செய்து புதிதாக மின்கம்பம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் பல்வேறு முறை கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் எந்த கோரிக்கையும் ஏற்கப்படாமல் விழுந்த மின்கம்பம் நான்கு ஆண்டுகளாக கடற்கரையில் அப்படியேவிழுந்த படிகிடக்கிறதுஉடனடியாக இந்த மின் கம்பத்தை சீர் செய்ய வேண்டும் என கிராம பஞ்சாயத்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரவு நேரத்தில் ரோட்டில் நடுவில் அமைக்கபட்டுள்ள பேரி கார்டு வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரியவில்லை
    • ரவு நேரத்தில் மிக வெளிச்சம் தரக்கூடிய உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    தக்கலை பழைய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையொட்டி தக்கலை டி.எஸ்.பி. கணேசன் மற்றும் தக்கலை போக்குவரத்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து மாற்றி போலீஸ் நிலையம் அருகில் பஸ் நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்து கடந்த ஒரு வாரத்தின் முன்பு பஸ் நிறுத்தம் ஆரம்பிக்கபட்டது.

    இந்நிலையில் இரவு நேரத்தில் ரோட்டில் நடுவில் அமைக்கபட்டுள்ள பேரி கார்டு வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரியவில்லை. இதனால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் உடனடியாக உயர் கோபுர மின் விளக்கு அமைத்தால் மட்டுமே இந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க முடியும்.

    மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் இரவு நேரத்தில் மிக வெளிச்சம் தரக்கூடிய உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×