search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன்கோவில்"

    • விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
    • உடுமலை மாரியம்மன் கோவில் தேரை முறையாக பராமரித்து பாதுகாப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    உடுமலை:

    உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 4-ம் தேதி கம்பம் போடும் நிகழ்ச்சியும், நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய உற்சவர் ஊர்வல நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தேருக்கு பதிலாக இந்த ஆண்டு இலுப்பை மற்றும் தேக்கு மரத்தை கொண்டு புதிய தேர் செய்யப்பட்டது.அதில் அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள், விஷ்ணு, முருகர், விநாயகர் உள்ளிட்ட 220 மரசிற்பங்கள், 120 பொதியல் சிற்பங்கள் அடங்கிய எண்கோண வடிவில் புதிய பரிணாமத்தில் காட்சியளித்த தேர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 53 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் செய்யப்பட்ட இந்த தேரானது 12 அடி உயரத்தில் ஐந்து நிலைகளை கொண்டதாகவும் சுவாமிகள் எழுந்தருளும் சிம்மாசனம் 2 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் கண்குளிர தேரில் எழுந்தருளிய மாரியம்மன் சூலத்தேவரையும் தரிசனம் செய்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு விழாவும் நிறைவு பெற்றது.

    ஆனால் 15 நாட்கள் கடந்தும் தேரை பாதுகாப்பதற்கு உண்டான நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.இதனால் தேர் சேதமடையும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில்,

    வரலாற்றை தாங்கி நின்ற நூறு ஆண்டுகள் கடந்த பழைய தேருக்கு பதிலாக இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய தேர் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.தேரோட்டம் நடைபெற்று முடிந்து இன்று வரையிலும் அதை முழுமையாக பாதுகாத்து பராமரிப்பதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் தேர் மழை,வெயில், காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிப்படையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. உடுமலையின் வரலாற்றையும் காவல் தெய்வமான அம்மனையும் சூலத்தேவரையும் தாங்கி நிற்கும் தேர் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. எனவே உடுமலை மாரியம்மன் கோவில் தேரை முறையாக பராமரித்து பாதுகாப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இதையடுத்து தேரை சீரமைக்கும் பணியை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

    • மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலில் வைத்திருந்த ரூ.3500 யை திருடி சென்றனர்.
    • பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள செம்மிபாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கதவின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க தாலியை மர்மநபர்கள் திருடி சென்றனர். அதே பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலில் வைத்திருந்த ரூ.3500 யை திருடி சென்றனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதன்படி இன்று மதியம் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
    • பின்னர் மாரியம்மன் கோவிலில் தேரோடும் வீதிகளில் பூ ரதங்கள் ஊர்வலமாக சென்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் பூச்சொரிதல் விழா பிரசித்தி பெற்றது.

    அதன்படி இன்று மதியம் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட பூ ரதங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று மாலை வந்தடைந்தது. இந்த ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் வாகனங்களில் அம்மன் படங்களும் வைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழவீதி, கீழவாசல், வண்டிக்காரத்தெரு, தொம்பன்குடிசை வழியாக மாரியம்மன்கோவிலுக்கு வந்து அடைந்தன. பின்னர் மாரியம்மன் கோவிலில் தேரோடும் வீதிகளில் பூ ரதங்கள் ஊர்வலமாக சென்றன. இதையடுத்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடைபெற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அருள்மொழிப்பேட்டை கிராமத்தில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

    பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அருள்மொழிபேட்டை கிராமத்தில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்த காட்சி.

    ×