search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை பெய்ய வாய்ப்பு"

    ஆந்திர கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. #ChennaiRain
    சென்னை:

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் தூறிக்கொண்டே இருந்தது.

    இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-



    மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு விட்டு, விட்டு மழை பெய்யும்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடல் காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

    நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலம், வால்பாறை, சேந்தமங்கலத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. சின்னக்கல்லார், செங்கோட்டை, மற்றும் தேவலாவில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், சேலம், திருவாரூர், கொல்லிமலை, பாபநாசம், பெருந்துறை, கூடலூர், தொண்டி, தென்காசி, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், உத்தமபாளையம், சென்னை வடக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புழல் உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியிருந்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #ChennaiRain
    வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain
    சென்னை:

    தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டிய நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக ஊட்டி, வால்பாறை, சின்னகல்லார், பெரியாறு, தேவலா, பொள்ளாச்சி, குந்தாபாலம், குழித்துறை, போடி நாயக்கனூர், உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், திருக்கோவிலூர், மயிலம், பூதப்பாண்டி, தக்கலை, பாபநாசம், செங்கோட்டை, ராதாபுரம், பண்ருட்டி, இரணியல் வந்தவாசி ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

    சென்னையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 13.8 மி.மீ மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 7 மி.மீ மழை பெய்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் மழை தூறல் விழுந்தது. சில பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதுகுறித்து சென்னை வானிலை அதிகாரி கூறியதாவது:-

    தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இந்த ஆண்டு பரவலாக கனமழை பெய்துள்ளது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்கிறது.

    சென்னையில் நேற்று மழை பெய்ததைவிட இன்றும் மழை பெய்யும். ஆனால் குறைவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiRain
    நெல்லை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் தினமும் பலத்த மழை பெய்வதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகலார் பகுதியில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. வால்பாறையில் (பிடிஓ) 12 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 11 செ.மீ., பெரியாறில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை,  நீலகிரி மாவட்டம் ஜிபசார் ஆகிய பகுதிகளில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RainInTamilNadu #SouthwestMonsoon
    ×