search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்து பொருட்கள்"

    • மருந்து பொருட்கள் மீதான 10 சதவீத விலை உயர்வை உடனே கைவிடவேண்டும்.
    • வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட குழு கூட்டம் கண்ணகி தலைமையில் கும்பகோணத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாநில மாநாட்டின் முடிவுகள் குறித்து மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி உரையாற்றினார்.

    எதிர்கால கடமைகள் மற்றும் மறியல் போராட்ட தயாரிப்பு குறித்து ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் தில்லைவனம் பேசினார்.

    விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமு.தர்மராஜன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் இடை க்குழு செயலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் அத்தியாவசிய பண்டங்களின் கடுமையாக விலை உயர்வை கட்டுப்படுத்து.

    மருந்து பொருட்கள் மீதான 10 சதவீத விலை உயர்வை உடனே கைவிடவேண்டும்.

    அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்கள், ஈமச்சடங்கு செய்யும் மயானச் செலவினம், கைத்தறி மற்றும் அதன் மூலப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்.

    கடந்த 2014 முதல் பெட்ரோல், டீசல் விலைதொடர்ந்து உயர்த்தி மக்களிடமிருந்து பெற்ற ரூ.27 லட்சம் கோடியை மக்களிடமே திருப்பி வழங்கு. பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.50 மற்றும் ரூ.40 என வழங்கும் வகையில் வரிகளை குறைத்திட வேண்டும்.

    மின் விநியோகத்தை கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு வழங்க வழி செய்யும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்.

    நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து.

    வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும்.

    தொழிலாளர்களின் வேலை நிரந்தரம், சம்பள உத்தரவாதம், போனஸ், பணிக் கொடை, ஓய்வூ தியம் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 30ம் தேதி கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்ப னந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட மையங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    328 மருந்துகளை மத்திய அரசு சமீபத்தில் தடை செய்திருந்த நிலையில், தலைவலி மாத்திரையான சாரிடான், டார்ட் வலி நிவாராணி, பிரிட்டான் ஆகிய 3 மருந்துகள் மீதான தடையை சுப்ரீம் கோர்ட் இன்று நீக்கியது. #SC #Saridon
    புதுடெல்லி:

    2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகள் எப்.டி.சி. மருந்துகள் என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துகளை இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் சோதனை செய்தது. அப்போது 344 வகையான மருந்துகள் குறிப்பிட்ட விகித சேர்க்கை இன்றியும், அலட்சியமாகவும் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த மருந்துகளால் உடல் நலத்துக்கு கேடு என்பதால் கடந்த 2015-ம் ஆண்டு அவை தடை செய்யப்பட்டன. இதை எதிர்த்து சில மருந்து நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மருந்துகளின் தயாரிப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

    அதன்படி இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் சிறப்பு வல்லுனர் குழு மீண்டும் இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 328 வகையான மருந்து தயாரிப்பில் மேற்படி மோசடிகள் நடைபெறுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. எனவே அந்த மருந்துகளை தடை செய்யுமாறு நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

    இதைத்தொடர்ந்து அந்த மருந்துகளை தயாரித்தல், விற்பனை மற்றும் வினியோகத்துக்கு மத்திய அரசு, கடந்த சில தினங்களுக்கு முன் தடை விதித்தது. இந்த மருந்துகள் பெரும்பாலும் வலி நிவாரணிகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கிருமி நாசினிகள் ஆகும். இதில் பிரபல தலைவலி மாத்திரையான சாரிடானும் இடம் பெற்று இருந்தது. 

    இந்த நிலையில், மத்திய அரசின் தடைக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதற்கட்டமாக சாரிடான், டார்ட் வலி நிவாராணி, பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்கி விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. 
    ×