search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saridon"

    328 மருந்துகளை மத்திய அரசு சமீபத்தில் தடை செய்திருந்த நிலையில், தலைவலி மாத்திரையான சாரிடான், டார்ட் வலி நிவாராணி, பிரிட்டான் ஆகிய 3 மருந்துகள் மீதான தடையை சுப்ரீம் கோர்ட் இன்று நீக்கியது. #SC #Saridon
    புதுடெல்லி:

    2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகள் எப்.டி.சி. மருந்துகள் என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துகளை இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் சோதனை செய்தது. அப்போது 344 வகையான மருந்துகள் குறிப்பிட்ட விகித சேர்க்கை இன்றியும், அலட்சியமாகவும் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த மருந்துகளால் உடல் நலத்துக்கு கேடு என்பதால் கடந்த 2015-ம் ஆண்டு அவை தடை செய்யப்பட்டன. இதை எதிர்த்து சில மருந்து நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மருந்துகளின் தயாரிப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

    அதன்படி இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் சிறப்பு வல்லுனர் குழு மீண்டும் இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 328 வகையான மருந்து தயாரிப்பில் மேற்படி மோசடிகள் நடைபெறுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. எனவே அந்த மருந்துகளை தடை செய்யுமாறு நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

    இதைத்தொடர்ந்து அந்த மருந்துகளை தயாரித்தல், விற்பனை மற்றும் வினியோகத்துக்கு மத்திய அரசு, கடந்த சில தினங்களுக்கு முன் தடை விதித்தது. இந்த மருந்துகள் பெரும்பாலும் வலி நிவாரணிகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கிருமி நாசினிகள் ஆகும். இதில் பிரபல தலைவலி மாத்திரையான சாரிடானும் இடம் பெற்று இருந்தது. 

    இந்த நிலையில், மத்திய அரசின் தடைக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதற்கட்டமாக சாரிடான், டார்ட் வலி நிவாராணி, பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்கி விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. 
    சாரிடான் மாத்திரை உள்பட 328 வகையான மருந்து தயாரிப்பில் மேற்படி மோசடிகள் நடைபெறுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. #Saridon #CombinationDrugs #Banned #Govenment
    புதுடெல்லி:

    2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகள் எப்.டி.சி. மருந்துகள் என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துகளை இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் சோதனை செய்தது. அப்போது 344 வகையான மருந்துகள் குறிப்பிட்ட விகித சேர்க்கை இன்றியும், அலட்சியமாகவும் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த மருந்துகளால் உடல் நலத்துக்கு கேடு என்பதால் கடந்த 2015-ம் ஆண்டு அவை தடை செய்யப்பட்டன. இதை எதிர்த்து சில மருந்து நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மருந்துகளின் தயாரிப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.



    அதன்படி இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் சிறப்பு வல்லுனர் குழு மீண்டும் இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 328 வகையான மருந்து தயாரிப்பில் மேற்படி மோசடிகள் நடைபெறுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. எனவே அந்த மருந்துகளை தடை செய்யுமாறு நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதைத்தொடர்ந்து அந்த மருந்துகளை தயாரித்தல், விற்பனை மற்றும் வினியோகத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்துகள் பெரும்பாலும் வலி நிவாரணிகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கிருமி நாசினிகள் ஆகும். இதில் பிரபல தலைவலி மாத்திரையான சாரிடானும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை தவிர மேலும் 6 எப்.டி.சி. மருந்துகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  #Saridon #CombinationDrugs #Banned #Govenment
    சாரிடன், டிகோல்டு உள்பட 300 மருந்துகளுக்கு தடை விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. அடுத்த வாரம் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. #bandrugs
    சென்னை:

    மருந்து, மாத்திரைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு ஒரு வழக்கு விசாரணை நடந்தது.

    அந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, “நிர்ணயிக்கப்பட்ட கலவை அளவு” கொண்ட மருந்து மாத்திரைகளில் எவற்றையெல்லாம் ஒழுங்குப்படுத்த வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடித்து பரிந்துரை செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.



    இதையடுத்து மருந்து தொழில் நுட்ப ஆலோசனை கழகம் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், மாத்திரைகள் பற்றி ஆய்வு செய்தது. அப்போது நிறைய நிறுவனங்களின் இருமல் மருந்துகள், வலி தீர்க்கும் மாத்திரைகள் சாப்பிட ஏற்றவை அல்ல என்பது தெரிய வந்தன.

    இந்த மருந்துகள் சாப்பிடுபவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கழகம் கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து சுமார் 300 மருந்து, மாத்திரைகளை பயன்படுத்த தடை விதிக்கலாம் என்று அந்த கழகம் பரிந்துரை செய்துள்ளது.

    தலைவலி, காய்ச்சல், ஜலதோ‌ஷம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளும் தரம் இல்லாமல் இருப்பதாக அந்த கழகம் எச்சரித்துள்ளது. குறிப்பாக பென்சிடல், பன்ட்ரம், சாரிடன், டி கோல்டு, டோட்டல் போன்ற மருந்து, மாத்திரைகளை தயாரிக்க தடை விதிக்க அந்த கழகம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    மத்திய சுகாதார அமைச்சகம் அந்த பரிந்துரைகள் மீது ஆலோசனை நடத்தி வருகிறது. அடுத்த வாரம் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

    பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் சாரிடன் போன்ற மாத்திரைகளை தயாரிக்க, விற்க தடை வரும் என்று கூறப்படுகிறது.

    மருந்து தொழில் நுட்ப ஆலோசனை கழகம் சுமார் 300 மருந்துகளை தடுக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த மருந்துகள் ரூ.2183 கோடி அளவுக்கு விற்பனை ஆகிறது.

    எனவே இந்த நிறுவனங்கள் தடையை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வார்கள் என்று தெரிகிறது. #bandrugs


    ×