search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தியாஷ்டமி"

    • பைரவாஷ்டகம் பாராயணம் செய்து மனதார வழிபடுங்கள்.
    • இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் அகலும்.

    மத்யாஷ்டமி எனும் அற்புதமான நாளில், பைரவரை பிரார்த்தனை செய்து, பைரவாஷ்டகம் பாராயணம் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் அகலும். எடுத்த காரியங்களை எல்லாம் வெற்றியாக்கி தந்தருள்வார் பைரவர்.

    பைரவ வழிபாடு சக்தி வாய்ந்தது. காலபைரவரை அனுதினமும் வழிபடலாம். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். வழக்கு முதலான சிக்கல்கள், எதிரிகள் முதலான தொல்லைகள், குடும்பத்தில் குழப்பங்கள், கடன் தொல்லையால் அவமானம் என கலங்கி தவிப்பவர்கள், அவசியம் பைரவரை வணங்கி வருவது நல்லது. அனைத்தையும் சுபமாக்கித் தருவார் காலபைரவர்.

    குறிப்பாக தேய்பிறை அஷ்டமியில், பைரவ வழிபாடு என்பது மிக மிக அவசியம். பைரவருக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி முதலான செந்நிற மலர்களைச் சூட்டுங்கள். எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்டவர் அனுமன். மனோதிடம் தருபவர் அனுமன். அவருக்கு வடைமாலை சார்த்துவது விசேஷம். அதேபோல் பைரவருக்கும் வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வது மகோன்னத பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    இன்று தேய்பிறை அஷ்டமி. இந்த நாளில், மாலையில் விளக்கேற்றி, பைரவாஷ்டகம் சொல்லி வழிபடுங்கள்.

    பைரவாஷ்டகம்

    தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்

    வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்

    நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்

    காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே


    பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்

    நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்

    கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்

    ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்

    பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்

    பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்

    நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்

    கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்

    ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க நிர்மலம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்

    நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்

    ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்

    த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்

    அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்

    காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்

    நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்

    ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்

    ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப

    நாஸனம்

    தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்

    த்ருவம்

    இந்த நன்னாளில், பைரவாஷ்டகம் சொல்லி பைரவ வழிபாடு செய்யுங்கள். முக்கியமாக, தெருநாய்களுக்கு இரண்டு ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டாவது வழங்குங்கள். எதிரிகள் தொல்லைகள் ஒழியும். எதிர்ப்புகள் அகலும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்வில் காரியத்தில் வெற்றியைக் காண்பீர்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை.
    • பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது.

    மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை. இந்த பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது. குறைந்த பட்சம் இரண்டு தினங்களாவது தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இதில் மத்யாஷ்டமி முக்கியமான தினம்.

    பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். மகாளய பட்சம் என்பது ஆவணிமாத பவுர்ணமிக்குப் பிறகு வரும் 15 நாள்களைக் குறிக்கும். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். பதினைந்து நாள்கள் நம் முன்னோர்கள் அனைவரும் பெரும் கூட்டமாக பூலோகம் வந்து தங்கும் காலமே மகாளய பட்சம் எனப்படுகிறது.

    ஒவ்வோரு அமாவாசை அன்றும் நாம் வழங்கும் தர்ப்பணங்களை எமதர்மராஜன் ஏற்று நம் முன்னோர்களுக்கு வழங்குவாராம். ஆனால் மகாளயபட்சத்தின் போது 'பித்ரு லோகத்தில் இருந்து உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு சென்று வாருங்கள்' என்று அவர்களை அனுமதிப்பாராம்.

    நம் முன்னோர்களுக்கு பிரியமான இடம் நம் வீடுதானே! எனவே அன்று நம் பித்ருக்கள் கூட்டமாக நம் வீட்டுக்கு வருவார்கள் என்கின்றன சாஸ்திரங்கள்.

    மகாளயபட்சத்தின் முக்கியமான நாள்கள்

    மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை. இந்தப் பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது. குறைந்த பட்சம் இரண்டு தினங்களாவது தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் முன்னோர்கள்.

    கட்டாயம் மகாளய அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும். அது தவிர மீதமுள்ள நாள்களில் ஏதேனும் ஒருநாள் நாம் தர்ப்பணம் முதலிய வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு உரிய நாள்களாக, மகாபரணி, மத்யாஷ்டமி, அவிதவாநவமி, மஹாவியதீபாதம், சந்நியஸ்தமாளயம், கஜச்சக்ஷமாளயம், மகாளய அமாவாசை ஆகிய நாட்களை வகுத்து தந்திருக்கிறார்கள்.

    பொதுவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யும்போது மூன்று தலைமுறை தாய், தந்தையருக்கு மட்டுமே தர்ப்பணம் வழங்குவோம். ஆனால் மகாளயபட்சத்தில் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் அறியாதவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் தர்ப்பணம் செய்யமுடியும்.

    இந்த நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது. மகாபரணி தந்தை, தாய் இறந்த திதி எதுவென்று அறியாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய நாள். முறையாக முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள், வழிபாடு செய்ய உகந்த நாள் மத்யாஷ்டமி.

    குடும்ப சுமங்கலிகளை வழிபட உகந்த தினம் அவிதவாநவமி. 27 யோகங்களில் ஒன்றான வியதீபாத யோகம் மகாளய பட்சத்தின்போது ஏற்பட்டால் அது மகாவியதீபாத யோகம் என்று அழைக்கப்படும். இந்த நாளில் செய்யப்படும் பித்ருவழிபாடு சகல நன்மைகளையும் பெற்றுத்தரும்.

    இந்த ஆண்டு மத்யாஷ்டமி இன்று. மகாளய பட்சத்தின் 15 நாள்களில் நடுநாயகமாகத் திகழ்வது இந்த மத்யாஷ்டமி. எனவே இந்த நாள் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. மத்யாஷ்டமி அன்று தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாடுகளை செய்தால் மகாளய பட்சம் முழுவதும் முன்னோர்வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

    மேலும் அறிவாற்றல் பெருகி காரியங்களில் வெற்றி கிடைக்கும். எனவே காரியத்தடைகள் விலக கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது மத்யாஷ்டமி வழிபாடு.

    குடும்பங்களில் சுமங்கலிகளாக வாழ்ந்து மறைந்த பெண்கள் குடும்பத்தினைக் காக்கும் தெய்வங்களாகத் திகழ்வர் என்பது நம்பிக்கை. முறையாக சுமங்கலி வழிபாடுகள், பிரார்த்தனைகள் செய்யாதவர்கள் குடும்பங்களில் சுபகாரியத் தடைகள் நிகழும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    திருமணம் முதலிய சுபகாரியங்களுக்கு முன்பாக சுமங்கலிப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் பல குடும்பங்களில் உள்ளன. மகாளய பட்சத்தில் வரும் நவமி திதி சுமங்கலி வழிபாட்டுக்கானது. இந்த நாளில் வீட்டின் மூத்த பெண்களை நினைத்து வழிபடுவதோடு, புடவை முதலிய மங்கலப்பொருள்களை தானம் செய்வதன் மூலம் சுமங்கலிகளின் ஆசி நமக்குக் கிடைக்கும்.

    பித்ரு தோஷம்?

    இதேபோன்று சந்நியாசிகளுக்கு உரிய திதி சந்நியஸ்தமாளயம், கணவரை இழந்த விதவைகள் செய்வதற்க்கான கஜச்சக்ஷமாளயம் மற்றும் துர்மரணம் நேரிட்டவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய சஸ்த்ரஹதமாளயம் ஆகிய நாள்கள் முக்கியமானவை. இந்த நாள்களில் முன்னோர் வழிபாடு செய்வது வாழ்வில் இருக்கும் துன்பங்களை நீக்கி நன்மைகள் சேர்ப்பவை.

    ஜாதகத்தில் பித்ரு தோஷம்

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். சுய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு கேதுகளுக்குடன் எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷமாகும். ஜாதகத்தில் ராகு-கேது 1, 5, 7, 9 இடங்களில் இருந்தாலும் அது பித்ரு தோஷம் ஆகும். ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும்.

    ராகு - கேது

    இத்தகைய பித்ரு தோஷம் உடைய ஜாதகக் காரர்களுக்கு அருமருந்தாகத் திகழ்வது இந்த மகாளயபட்சம். மகாளயபட்ச நாள்களில் தினமும் குளித்து பித்ருக்களை வழிபடுவதன் மூலம் அனைத்து தோஷங்களையும் நீக்கலாம். குறிப்பாக இந்த நாள்களில் வறியவர்களுக்கு உணவு, உடை ஆகியன வற்றை தானம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம். முன்னோர்களின் ஆசி நமக்கு அனைத்து நலன்களையும் பெற்றுத்தரும்.

    ×