search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகனை கொன்ற தந்தை"

    • குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்ததா? அல்லது சொத்து பிரச்சினை காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • கைதான சவுந்தர பாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இரணியல்:

    இரணியல் அருகே பாளையம் சரல் விளை பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது 80). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவருக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். 4 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. 2 மகன்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதில் ஒரு மகன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். நாகராஜன் (வயது 40) என்பவரும், அவரது தந்தை சவுந்தர பாண்டியனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நாகராஜன் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.

    தினமும் குடித்துவிட்டு வந்து தனது தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. நேற்றும் நாகராஜன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடியதுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை தந்தை சவுந்தரபாண்டியன் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் நாகராஜன் கேட்கவில்லை. தந்தை சவுந்தர பாண்டியனையும் தாக்க முயன்றதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சவுந்தரபாண்டியன் நாகராஜனை கோடாரியால் வெட்டிக்கொலை செய்தார். பின்னர் இரணியல் போலீசில் சவுந்தர பாண்டியன் சரணடைந்தார். போலீசில் மகனை கொலை செய்ததாக கூறியதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு பிணமாக கிடந்த நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்ததா? அல்லது சொத்து பிரச்சினை காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைதான சவுந்தர பாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி அருகே பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தந்தை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் பத்திரகாளிபுரம் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் ஈஸ்வரன் (வயது36). ஈஸ்வரன் குடி பழக்கத்திற்கு ஆளானதால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. பணம் தர மறுத்தால் போசை கொன்று விடுவதாக ஈஸ்வரன் மிரட்டி உள்ளார். குடி பழக்கத்திற்கு ஆளான மகனால் போஸ் நிம்மதி இழந்தார்.

    சம்பவத்தன்று ஈஸ்வரன், போசிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். தர மறுக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த போஸ் அருகில் இருந்த கல்லை எடுத்து ஈஸ்வரனை கடுமையாக தாக்கினார். படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து போஸ் பூலாநந்தபுரம் வி.ஏ.ஓ. கல்யாணியிடம் ஒப்புதல் வாக்குமுலம் அளித்தார். வி.ஏ.ஓ. புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் போசிடம் விசாரித்து வருகின்றனர்.

    ×