என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செல்போனில் கேம் விளையாடிய மகனை கொன்ற தந்தை
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தி மாவட்டம் பரஸ்ராம்பூரைச் சேர்ந்த ராகேஷ். இவரது மகன்கள் ராகுல் (13), ராஜன் (8).
இந்த நிலையில் சிறுவன் ராகுல் திடீரென மாயமனான். இதுகுறித்து அவனது தாத்தா பால்கோவிந்த் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தபோது தந்தை ராகேஷ் கூறிய தகவல்கள் முன்னுக்கு பின்னாக இருந்தது.
இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், “தொடர்ந்து செல் போனில் விளையாடியதால் மகனை அடித்து கொன்றதாக” தெரிவித்தார்.
சிறுவன் ராகுல் எந்த நேரமும் செல்போனில் கேம் விளையாடிபடியே இருந்து வந்தான். சாப்பிடாமலும் தொடர்ந்து செல்போனிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறான். இதை தந்தை கண்டித்தும் கேட்கவில்லை.
சம்பவத்தன்று ராகேஷ், மகனை அழைத்தபோது அவன் செல்போனில் விளையாடியபடி இருந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த ராகேஷ் மகனை நெஞ்சில் காலால் மிதித்து தள்ளினார்.
இதில் சிறுவன் ராகுல் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராகேஷ் மகன் உடலை அங்குள்ள காட்டு பகுதியில் புதைத்து விட்டார்.
இதையடுத்து போலீசார் சிறுவன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்