search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி டாக்டர்கள்"

    • தமிழகம் முழுவதும் இதுவரை 70-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் பொதுமக்களை ஏமாற்றி மருத்துவ சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் குறித்து தொடர் புகார்கள் வந்தது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மருத்துவ துறையும், போலீஸ் துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் பொதுமக்களை ஏமாற்றி மருத்துவ சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் குறித்து தொடர் புகார்கள் வந்தது. அவ்வாறு செயல்பட்டு வரும் போலி டாக்டர்கள் மீது போலீஸ் துறை சட்டப்படி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

    அதன்படி காஞ்சிபுரம் மாநகர பகுதியிலுள்ள போலி டாக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கையை எடுத்திட காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில், மருத்துவ நலப்பணிகள் இயக்குனர் கோபிநாத் தலைமையில் காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியஸ் சீசர், மற்றும் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த திடீர் சோதனையில் காஞ்சிபுரம் நிமிந்தகரை தெருவை சேர்ந்த சுதர்சன்பாபு மற்றும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னதி தெருவை சேர்ந்த சேஷாத்திரி ராஜீ ஆகிய இருவரும் எந்தவித தகுந்த மருத்துவ படிப்பும் இல்லாமல், போலி டாக்டர்களாக செயல்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலி டாக்டர்கள் இருவரும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மேலும் பலர் தலைமறைவு
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன் உமராபாத் போலீஸ் நிலையத்தில் நேற்று ஓரு புகார் செய்தார். அதில் உமராபாத் போலீஸ் எல்லையில் ஏராளமான போலி டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று தகவல் பட்டியலை புகாராக தெரிவித்தார்.

    இது குறித்து போலீசார் வெங்கடசமுத்திரம் ஊராட்சி கூட்டு ரோட்டில் ஒரு கிளினிக்கை சோதனை செய்தபோது ஆம்பூர் எஸ். கே.ரோடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 73) மற்றும் வீராங்குப்பம் கூட்டு ரோட்டில் ஜெயபால் (87) ஆகிய 2 போலி டாக்டர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் போலி டாக்டர்கள் சோதனை அறிந்த மற்ற போலி டாக்டர்கள் தங்களுடைய கிளினிக்கை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

    • ஆய்வு செய்த போது பிடிபட்டனர்
    • மருத்துவமனையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதிகளில் டாக்டருக்கு படிக்காமலேயே நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இணைந்து திமிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது திமிரியை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த பாஷா என்ற மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அப்போது பாஷா (வயது 46) என்பவர் டாக்டருக்கு படிக்காமல், ஊசி செலுத்துவது உள்ளிட்ட ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாஷாவை கைது செய்தனர்.

    மேலும் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சீல் வைப்பு அதேபோன்று திமிரியை அடுத்த காவனூர் பகுதியில் செயல்பட்டு வந்த இளங்கோ என்பவருக்கு சொந்தமான மருத்துவமனையிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் இளங்கோ (43) என்பவர் டாக்டருக்கு படிக்காமல் மருத்துவராக செயல்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இளங்கோவை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் பாஷாவுக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் இளங்கோவுக்கு சொந்தமான மருத்துவமனையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • 12 பேர் கொண்ட குழு அமைத்து கண்காணிப்பு
    • ஆம்பூர், வாணியம்பாடியில் சோதனை 12 பேர் கொண்ட குழு அமைத்து கண்காணிப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவம் படிக்காமல் சிலர் கிளீனிக் நடத்தி பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவ அலுவலர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் போலி மருத்துவர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய உத்தர விட்டார். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் நாட்றாம்பள்ளி பகுதிகளில் குழுவினர் சோதனை செய்தனர்.

    இதில், திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை கிராமத்தைச் சேர்ந்த பழனி (51) என்பவர் மருத்து வம் படிக்காமல் அதேபகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற அரசு அதிகாரிகள் பழ னியை கைது செய்து அவரது கிளீனிக்கில் இருந்து மருந்து, மாத் திரைகள், சிரஞ்சிகளை பறிமுதல் செய்தனர். அதே பகுதியில் மருத்து வம் படிக்காமல் கடந்த 7 ஆண்டு களாக கிளீனிக் நடத்தி வந்த வேலன் (49) என்பவரையும் போலீ்சார் கைது செய்து, அவரது கிளீனிக்கில் இருந்து மருந்து, மாத்திரைகள், டானிக் உள்ளிட்டவை களை பறிமுதல் செய்தனர்.

    ஆம்பூர் சுற்ற வட்டாரப்பகுதி களில் ஆம்பூர் அரசு மருத்துவ மனையின் துணை மருத்துவ அலுவலர் நதியா தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தியதில், ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (47), கடாம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (69) ஆகிய 2 பேரும் மருத்துவம் படிக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்திமருத்துவம் பார்த்துவருவது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து, 2 பேரையும் காவல் போலீசார் கைது செய்து அவர்களது கிளீனிக்கில் இருந்து மருத் துவ உபகரணங்கள் மற்றும் மருந்து-மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த சோதனையில் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் (47) என்பவர் மருத்து வம் படிக்காமல் கடந்த 7 ஆண்டு களாக கிளீனிக் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல் துறையினர் அங்கிருந்த மருந்து,மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    ஜோலார்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் (30) என்பவரும் மருத்து வம் படிக்காமல் வைத்தியம் பார்த்து வந்ததை தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்து அவரது கிளீனிக் குக்கு 'சீல்' வைத்தனர்.

    ×