2 போலி டாக்டர்கள் கைது

மேலும் பலர் தலைமறைவு போலீசார் விசாரணை
2 போலி டாக்டர்கள் கைது
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன் உமராபாத் போலீஸ் நிலையத்தில் நேற்று ஓரு புகார் செய்தார். அதில் உமராபாத் போலீஸ் எல்லையில் ஏராளமான போலி டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று தகவல் பட்டியலை புகாராக தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் வெங்கடசமுத்திரம் ஊராட்சி கூட்டு ரோட்டில் ஒரு கிளினிக்கை சோதனை செய்தபோது ஆம்பூர் எஸ். கே.ரோடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 73) மற்றும் வீராங்குப்பம் கூட்டு ரோட்டில் ஜெயபால் (87) ஆகிய 2 போலி டாக்டர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் போலி டாக்டர்கள் சோதனை அறிந்த மற்ற போலி டாக்டர்கள் தங்களுடைய கிளினிக்கை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com