search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போயிங் 737 மேக்ஸ் 8"

    தொடர் விபத்துகளால் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் தயாரிப்பை குறைக்க போயிங் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. #Boeing737MAX8
    சிகாகோ:

    அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தது, பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகர் நைரோபிக்கு கடந்த மாதம் 10-ந்தேதி புறப்பட்டு சென்றது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், 6 நிமிடங்களில் அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 157 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    அதற்கு முன்பாக கடந்த ஆண்டு அக் டோபர் மாதம் 29-ந்தேதி இதே ரக லயன் ஏர் விமானம், இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளாகி 189 பேர் பலியாகினர்.

    இப்படி தொடர்ந்து விபத்துக்குள்ளானதால் இந்த விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்தன.

    இந்த விபத்துகளால் போயிங் விமான நிறுவனம் மீது அமெரிக்காவின் சிகாகோ நகர கோர்ட்டில் 2 வழக்குகள் தாக்கலாகி உள்ளன. விமானத்தின் தொழில் நுட்ப கோளாறுதான் விபத்துக்கு காரணம் என அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் தயாரிப்பை குறைக்க போயிங் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இந்த விமானத்தின் மாதாந்திர உற்பத்தி இலக்கு 52-ல் இருந்து 42 ஆக குறைக்கப்படுகிறது.

    தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவதால் பல்வேறு விமான நிறுவனங்கள் இந்த விமானத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதால்தான் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் தயாரிப்பை குறைப்பது என போயிங் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. #Boeing737MAX8 
    எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் போயிங் விமானங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், போயிங் மேக்ஸ் 737 விமான விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Boeing737MAX8
    வாஷிங்டன்:

    எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

    இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன. மேலும் சில நாடுகளும் விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றன. தொடர் அழுத்தம் காரணமாக அமெரிக்காவும் போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களுக்கு தடை விதித்தது.



    இந்த நிலையில், 737 மேக்ஸ் விமானங்களை விநியோகம் செய்வதை போயிங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. விநியோகம் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், போயிங் விமானங்களை உற்பத்தி செய்யும் பணிகள் தொடரும் என்றும் போயிங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Boeing737MAX8

    போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தரையிறக்கிய பின்னர், இன்று 35 விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரத்து செய்ய உள்ளது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
    புதுடெல்லி:

    எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தன.



    இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ்-8 விமானங்களை தரையிறக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) முடிவு செய்தது. அதன்படி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

    அதன்பின்னர், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் நேற்று 20 விமானங்களின் சேவையை ரத்து செய்தன. இதனால் சுமார் 300 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இன்று 35 விமானங்களின் சேவையை ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்ய உள்ளது.

    முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் பெறாமல் அவர்களுக்கு தேவையான தங்கும் வசதியை செய்துகொடுக்க வேண்டும் என்றும் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
    எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து, பல்வேறு நாடுகள் போயிங் விமானங்களுக்கு தடை விதித்து வரும் நிலையில், கனடாவும் தங்களது வான்எல்லையில் போயிங் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. #Boeing737MAX8
    ஓட்டாவா:

    எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

    இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து, நார்வே, வியட்நாம், பிரிட்டன், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட மேலும் பல நாடுகளும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு தடைவிதித்தன.



    இந்த நிலையில், கனடாவும் போயிங் விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. இதுகுறித்து கனடாவின் போக்குவரத்துத்துறை மந்திரி மார்க் கர்னோவ் கூறும்போது, பாதுகாப்பு கருதி வணிக ரீதியிலான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ மற்றும் ‘போயிங் 737 மேக்ஸ் 9’ விமானங்கள் கனடாவில் இருந்து புறப்படவோ, கனடாவுக்கு வரவோ அல்லது கனடா வான் எல்லையில் பறக்கவோ தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க மத்திய விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #CanadaBansBoeing737MAX8

    போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் அனைத்தும் இன்று மாலை 4 மணியளவில் தரையிறக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
    புதுடெல்லி:

    எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
     
    இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன.



    இந்தியாவிலும் நேற்று போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் நடந்த ஆலோசனையின்போது, போயிங் 737 மேக்ஸ்-8 விமானங்களை தரையிறக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) முடிவு செய்திருப்பதாக விமான போக்குவரத்து துறை டுவிட்டர் மூலம் நேற்று இரவு தகவல் வெளியிட்டது.

    “பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில், தேவையான மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வரை விமானங்கள் நிறுத்திவைக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பே நமது முதல் முன்னுரிமை. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகம் முழுவதிலும் உள்ள விமான நிறுவனங்கள், விமான உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று மாலை 4 மணியளவில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    அதேசமயம் விமான நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இந்திய விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
     
    இந்தியாவில் இயக்கப்படும் போயிங் 737 ரக விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமா என்பது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #EthiopianAirlines #Boeing737MAX8 #EthiopianFlightCrash
    புதுடெல்லி:

    எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியதில், 157 பேர் பரிதாபமாக இறந்தனர். இதே ரக விமானம்தான் கடந்த அக்டோபர் 29-ந் தேதி இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது என்பதால் அந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக சீனா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு விமான நிறுவனங்கள் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளது.

    இந்த நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் அந்த ரக விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமா என்பது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தமட்டில் 2 தனியார் நிறுவனங்கள் இந்த ரக விமானங்களை இயக்கி வருகின்றன. மொத்தம் 21 விமானங்கள் இயக்கப்படுகின்றன.  #EthiopianAirlines #Boeing737MAX8 #EthiopianFlightCrash 
    எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. அவர்களில் 6 பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். #EthiopianAirlines #Boeing737MAX8 #EthiopianFlightCrash
    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த போயிங்-737 விமானம், நேற்றுமுன்தினம் காலை அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.

    விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில், அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த அனைவரும் பலியானார்கள். 33 நாடுகளை சேர்ந்த பயணிகள் அதில் பயணித்தனர்.



    அவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 4 பேர் என்று முதலில் தகவல் வெளியானது. அவர்களின் பெயர்கள், வைத்யா பன்னகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அன்னகேஷ், நுகவரபு மனிஷா, ஷிகா கார்க் என்று தெரியவந்தது.

    இந்நிலையில், வைத்யா பன்னகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அன்னகேஷ் ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்த பிரேரிட் தீக்‌ஷித், அவருடைய மனைவி கோஷா, மகள்கள் ஆஷ்கா, அனுஷ்கா ஆகியோரும் அதே விமானத்தில் பயணம் செய்து பலியாகி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் குஜராத் மாநிலம் சூரத் நகரை பூர்வீகமாக கொண்டவர்கள்.

    இவர்களுடன், பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.



    பலியானோரில், ஷிகா கார்க், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பிலான ஐ.நா. பெண் ஆலோசகராக பணியாற்றி வந்தார். ஐ.நா. தொடர்பான ஒரு கூட்டத்தில் பங்கேற்க கென்யாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவர் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

    அவருடைய குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல தடவை முயன்றும் முடியவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

    மேலும், உயிரிழந்த வைத்யா பன்னகேஷின் மகன், கனடா நாட்டின் டொரண்டோ நகரில் வசித்து வருகிறார். அவரை சுஷ்மா சுவராஜ் தொலைபேசியில் தொடர்பு பேசினார். அப்போது, உங்கள் குடும்பத்தினர் 6 பேர் விமான விபத்தில் பலியானதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று அவர் கூறினார்.

    மேலும், பலியானோரின் குடும்பத்தினருக்கு உதவுமாறு கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, விமானத்தின் கருப்பு பெட்டி சிக்கி உள்ளது. குரல் பதிவு கருவிகளும், டேட்டா பதிவு கருவிகளும் கிடைத்துள்ளன.

    இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். #EthiopianAirlines #Boeing737MAX8 #EthiopianFlightCrash 
    எத்தியோப்பியாவில் 157 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த போயிங் 737 விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash #EthiopianFlight #EthiopianAirlinesblackbox
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற  போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த 149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர்.



    இந்நிலையில், துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் சிக்கிய அந்த விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக எத்தியோப்பியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பதிவாகியுள்ள விமானியின் உரையாடல்களை வைத்து விபத்துக்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash #EthiopianFlight #EthiopianAirlinesblackbox 
    எத்தியோப்பியாவில் நிகழ்ந்த கோர விபத்தைத் தொடர்ந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் பாதுகாப்பு கருதி தரையிறக்கியது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ்-8’ விமானம், நேற்று காலை கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக அதிகாரிகள் உயர்மட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

    இந்த விபத்தைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் மீதான பாதுகாப்பு அச்சம் எழுந்தது. எனவே, ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கும்படி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டது. அதன்படி விமானங்கள் தரையிறக்கப்பட்டன. அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.



    விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியாத நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களை தரையிறக்க முடிவு செய்திருப்பதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த விமானங்களை இயக்கக்கூடாது என விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதேபோல் சீனாவிலும் ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டு, வர்த்தகரீதியிலான சேவை  நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash
    எத்தியோப்பியாவில் போயிங் விமான விபத்தில் ஐநா ஆலோசகர் உள்ளிட்ட 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #EthiopianAirlines #Boeing737MAX8 #EthiopianFlightCrash
    புதுடெல்லி:

    எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் நேற்று காலை 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது. வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. இதனால் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
     
    பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில், தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே உள்ள பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்து கிடப்பது தெரியவந்தது. இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. 149 பயணிகள், விமானிகள் உள்பட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்தனர்.



    இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    விமான விபத்தில் இறந்த இந்தியர்களின் பெயர்களை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் வெளியிட்டார்.

    “இந்தியாவைச் சேர்ந்த வைத்திய பன்னகேஷ் பாஸ்கர், வைத்திய ஹன்சின் அன்னகேஷ், நுகவரபு மனிஷா மற்றும் ஷிகா கார்க் ஆகியோர் விமான விபத்தில் மரணம் அடைந்திருப்பதாக எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எனக்கு தகவல் தெரிவித்தனர்.
     
    இறந்தவர்களில் ஷிகா கார்க், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆலோசகர் என மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் உறுதி செய்துள்ளார். ஷிகா கார்க், நைரோபியில் நடைபெறும் ஐநா கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் கூறி உள்ளேன்” என சுஷ்மா குறிப்பிட்டார். #EthiopianAirlines #Boeing737MAX8 #EthiopianFlightCrash
     
    ×