search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான விபத்து எதிரொலி - போயிங் மேக்ஸ் 737 விமான விநியோகம் நிறுத்தம்
    X

    விமான விபத்து எதிரொலி - போயிங் மேக்ஸ் 737 விமான விநியோகம் நிறுத்தம்

    எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் போயிங் விமானங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், போயிங் மேக்ஸ் 737 விமான விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Boeing737MAX8
    வாஷிங்டன்:

    எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

    இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன. மேலும் சில நாடுகளும் விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றன. தொடர் அழுத்தம் காரணமாக அமெரிக்காவும் போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களுக்கு தடை விதித்தது.



    இந்த நிலையில், 737 மேக்ஸ் விமானங்களை விநியோகம் செய்வதை போயிங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. விநியோகம் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், போயிங் விமானங்களை உற்பத்தி செய்யும் பணிகள் தொடரும் என்றும் போயிங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Boeing737MAX8

    Next Story
    ×