search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டு தற்கொலை"

    • பவானிசாகா் பங்களாமேடு பகுதியில் தங்கி நெசவு தொழில் செய்து வந்தார்.
    • அவர் வேலை பார்த்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சாவக்காட்டுபாளையம் தெற்கு வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜன்(40). நெசவு தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. மோகன்ராஜன் கடந்த 3 மாதமாக பவானிசாகா் பங்களாமேடு பகுதியில் தங்கி நெசவு தொழில் செய்து வந்தார்.

    மோகன்ராஜன் அவரது நண்பர்களிடம் கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்தார்.கடனை திரும்ப செலுத்த முடியாத மனவேதனையில் இருந்த மோகன்ராஜன் நேற்று அவர் வேலை பார்த்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோனுபரீத் (20)என்பவரும் தங்கி அதை ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
    • தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஈரோடு, 

    சத்தீஸ்கர் மாநிலம் ஜனிஹீர் பகுதியை சேர்ந்தவர் டிஜோராம் (20). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூர் நல்லி கவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    அவரது அறையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சோனுபரீத் (20)என்பவரும் தங்கி அதை ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கலந்த 10 நாட்களுக்கு முன்பு டிஜோராம் சத்தீஸ்கருக்கு சென்றார். அதன் பிறகு மீண்டும் தான் வேலை செய்யும் ஆலைக்கு வந்தார். சொந்த ஊர் சென்று திரும்பி வந்ததிலிருந்து நிஜோராம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

    அதன் பிறகு வேலைக்கு செல்லாமல் அறையிலேயே இருந்து வந்துள்ளார். இது குறித்த அவரிடம் கேட்டபோது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார்.

    இந்நிலையில் நேற்று அறையில் உடன் இருந்த சோனுபரீத் வேலைக்கு சென்று விட்டார். அறையில் டிஜோராம் மட்டும் இருந்துள்ளார். மாலையில் வேலையை முடித்து கொண்டு சோனுபரீத் அறைக்கு வந்தபோது டிஜோராம் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிஜோராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர்க ளுக்கு குழந்தை இல்லாததால் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
    • நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறி வந்தாராம்.

    அம்மாபேட்டை

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி அடுத்த பெரிய வடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (35).

    இவர் சேலம் ரெயில்வே துறையில் ஆப் ரேட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (32).

    இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

    குழந்தை பிறந்தது முதலே கிருஷ்ணவேணி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் 2 குழந்தை களையும் வைத்து பராமரிக்க முடியவில்லை.

    நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறி வந்தாராம்.

    இதையடுத்து அவர் தனது மனைவியை குருவரெட்டியூர் பகுதியில் உள்ள கிருஷ்ணவேணியின் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் கிருஷ்ண வேணியின் சகோதரர் செல்வராஜிக்கு போன் செய்து கிருஷ்ணவேணி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொள்கிறார். எனவே அவரை அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்.

    இதையடுத்து விடு முறை கிடைத்தவுடன் வந்து அழைத்து செல்வதாக செல்வராஜ் கூறினார்.

    இந்த நிலையில் கிருஷ்ண வேணி வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி கொண்டார்.இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கன வே இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×