search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமாள் கோவிலில்"

    • சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது.
    • பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

    கடலூர்:

    திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமிக்கு மக்கள் நலன் பெற வேண்டி பால், தயிர், மஞ்சளால் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. 12 மணி அளவில் மூலவர் சஞ்சீவி ராய பெருமாளுக்கு மகா தீபாரதனை நடந்தது.

    மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட சஞ்சீவி ராய பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளித்தார். மேலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தா்கள் மாவிளக்கு ஏற்றியும், சக்கரை பொங்கல், சுண்டல் வைத்து பெரு மாளுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

    இதேபோல் திட்டக்குடி, ராமநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    • சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி தன்வந்திரி பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழ மையையொட்டி சிறப்பு வழிபாடுநடந்தது. மூலவர்தன்வந்திரி பகவான் திருப்பதி சீனிவாசனாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சிறப்பு வழி பாட்டில் பட்டிமன்ற பேச்சா ளர் ராஜா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.அவருடன் பட்டிமன்ற குழுவினரும் வந்து சாமிதரிசனம்செய்தனர். இவர்களை பண்ருட்டி ஆரிய வைசிய சமூகத்தினர் வரவேற்றனர்.

    • திருவதிகையில் அமைந்துள்ளது சரநாராயண பெருமாள் கோவில்.
    • இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அமைந்து ள்ளது சரநாராயண பெரு மாள் கோவில். இது திருமண வரம் அருளும் வைணவ தலமாக திகழ்கி றது. இந்த கோவில் இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடலூர், விழுப்பு ரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி கும்பிட்டு செல்வார்கள். இங்கு கடந்த 18-ந் தேதி முதல் புரட்டாசி மகோற்ச வம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மூலவர் சரநாராயண பெருமாள் திருமலை திருப்பதி மலையப்பனாக நெய் தீப ஒளியில் அருள்பாலித்து வருகிறார்.

    இங்கு புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் திருமலையில் நடைபெறும் அனைத்து சேவைகளும் நடக்கிறது. நேற்று ஏகதின பிரம்மோற்சவம் நடைபெ ற்றது. காலை 6 மணி அளவில் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் ஆகியவையும், 7 மணிக்கு பிரம்மோற்சவ கொடியே ற்றமும் நடந்தது. தொடர்ந்து 10 வாகனங்களில் சர நாரா யண பெருமாள் எழுந்தருளி ஏகதின பிரம்மோற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவி ந்தா" என்ற பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதனை தொட ர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பெருமாள் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது
    • சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை பெருமாள் கோவிலில் வருடாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் அமைந்துள்ள கோதண்ட ராமர் சீதாலட்சுமி திருக்கோவில் ஐந்தாவது ஆண்டு வருடம் அபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த அபிஷேக விழாவை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டு சென்றனர். விழா குழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சென்னிமலை அருகே மேலப்பாளையம் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவ உற்சவம் விழா வரும் 16-ந் தேதி நடக்கிறது.
    • விழா எற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே மேலப்பாளையம் ஆதிநாரா யண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை யொட்டி திருக்கல்யாண வைபவ உற்சவம் மற்றும் ஸ்ரீ சுதர்சன ேஹாம விழா வரும் 16-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலை 8.30 மணிக்கு ஸ்ரீ சுதர்சன ேஹாமம் தொடங்குகிறது. அதை தொடர்ந்து 10.30 மணிக்கு ஆதிநாராயண பெருமாள் மற்றும் அலமேலு மங்கை-நாச்சியார் அம்மனுக்கு பூர்ணாகுதி மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    பிறகு மாலை 3.30 மணிக்கு சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் சீர்வரிசை ஊர்வலம் நடக்கிறது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க 4 ராஜ வீதிகள் வழியாக ஊர்வலமாக சீர்வரிசை தட்டுகள் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து மேலப் பாளையத்தில் உள்ள ஆதி நாராயண பெருமாள் கோவிலில் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்படு கிறது.

    அங்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் திருக்கல்யாண உற்சவம் ஆகிய வை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சாமிகளின் திருவீதி உலா நடக்கிறது.

    விழா எற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.

    ×