search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adinarayana"

    • சென்னிமலை அருகே மேலப்பாளையம் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவ உற்சவம் விழா வரும் 16-ந் தேதி நடக்கிறது.
    • விழா எற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே மேலப்பாளையம் ஆதிநாரா யண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை யொட்டி திருக்கல்யாண வைபவ உற்சவம் மற்றும் ஸ்ரீ சுதர்சன ேஹாம விழா வரும் 16-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலை 8.30 மணிக்கு ஸ்ரீ சுதர்சன ேஹாமம் தொடங்குகிறது. அதை தொடர்ந்து 10.30 மணிக்கு ஆதிநாராயண பெருமாள் மற்றும் அலமேலு மங்கை-நாச்சியார் அம்மனுக்கு பூர்ணாகுதி மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    பிறகு மாலை 3.30 மணிக்கு சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் சீர்வரிசை ஊர்வலம் நடக்கிறது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க 4 ராஜ வீதிகள் வழியாக ஊர்வலமாக சீர்வரிசை தட்டுகள் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து மேலப் பாளையத்தில் உள்ள ஆதி நாராயண பெருமாள் கோவிலில் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்படு கிறது.

    அங்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் திருக்கல்யாண உற்சவம் ஆகிய வை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சாமிகளின் திருவீதி உலா நடக்கிறது.

    விழா எற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.

    • கோபி அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிகளில் கோபி கூகலூர், கொங்க ர்பாளையம், காசிபாளை யம், குன்னத்தூர் க.குள்ள ம்பாளையம் பொல வகாளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து க்காளியம்மன் கோவில் வகையாரா ஸ்ரீதேவி பூதேவி ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    முன்னதாக 10-ந் தேதி மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜை நடைபெற்றது. 11-ந் தேதி வாஸ்துசாந்தி, 12-ந் தேதி சாற்றுமுறை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை 4-ம் கால பூஜை நடந்தது. காலை 8.30 மணிக்கு மகா கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சி தொடர்ந்து மூலவர் விமானம், ராஜகோபுரம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிநராயண பெரு மாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    மேலும் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் கோபி கூகலூர், கொங்க ர்பாளையம், காசிபாளை யம், குன்னத்தூர் க.குள்ள ம்பாளையம் பொல வகாளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×