search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

    • கோபி அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிகளில் கோபி கூகலூர், கொங்க ர்பாளையம், காசிபாளை யம், குன்னத்தூர் க.குள்ள ம்பாளையம் பொல வகாளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து க்காளியம்மன் கோவில் வகையாரா ஸ்ரீதேவி பூதேவி ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    முன்னதாக 10-ந் தேதி மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜை நடைபெற்றது. 11-ந் தேதி வாஸ்துசாந்தி, 12-ந் தேதி சாற்றுமுறை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை 4-ம் கால பூஜை நடந்தது. காலை 8.30 மணிக்கு மகா கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சி தொடர்ந்து மூலவர் விமானம், ராஜகோபுரம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிநராயண பெரு மாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    மேலும் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் கோபி கூகலூர், கொங்க ர்பாளையம், காசிபாளை யம், குன்னத்தூர் க.குள்ள ம்பாளையம் பொல வகாளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×