search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தூக்குபோட்டு"

    • கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • விஜயா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் சாணா திக்கல் மேட்டை சேர்ந்தவர் சித்தையன் (36).

    இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பவானி தொட்டி பாளையத்தை சேர்ந்த மாதப்பன் மகள் விஜயா (32) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதை த்தொடர்ந்து கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று விஜயா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து விஜயாவின் தந்தை மாதப்பன் அம்மா பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • ஜீவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் 2-வது தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஜீவிதா (30). குமார் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜீவிதா குப்பையை கூட்டி வீட்டின் மூலையில் வைத்துள்ளார். இதை குமார் கேட்டபோது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஒரு வாரமாக கணவன்-மனைவி இருவரும் பேசிக்கொள்ள வில்லை.

    இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வழக்கம் போல் வீட்டின் அறையில் தூங்க சென்றனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் குமார் எழுந்து பார்த்த போது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் உள்ள மற்றொரு அறை தாழிடப்பட்டிருந்தது. அந்த அறையை குமார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது ஜீவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களாக வயிற்று வலி காரணத்தால் மாதம்மாள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • அருகில் உள்ள ஒரு அறையில் மாதம்மாள் தூக்கில் தொங்கியவாறு இருந்தார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் தச்சாங்காட்டு வலசு பகுதியை சேர்த்த சின்னசாமி. இவரது மனைவி மாதம்மாள் (48). கீரை வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் மாதம்மாள் கடந்த 2 மாதங்களாக வயிற்று வலி காரணத்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் இரவு உறங்க சென்றனர். பின்னர் சின்னசாமி காலை எழுந்து வெளியே வந்து பார்க்கும்போது கதவு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் இட்டு இருந்தது.

    உடனே அவர் மகனுக்கு போன் செய்து கதவை திறக்க வருமாறு கேட்டுள்ளார். பின்னர் கதவை திறந்து பார்க்கும் போது அருகில் உள்ள ஒரு அறையில் மாதம்மாள் தூக்கில் தொங்கியவாறு இருந்தார்.

    உடனடியாக அவரை இறக்கி பார்த்தபோது மாதம்மாள் இறந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×