பெண் தூக்குபோட்டு தற்கொலை

கடந்த 2 மாதங்களாக வயிற்று வலி காரணத்தால் மாதம்மாள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அருகில் உள்ள ஒரு அறையில் மாதம்மாள் தூக்கில் தொங்கியவாறு இருந்தார்.
பெண் தூக்குபோட்டு தற்கொலை
Published on

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் தச்சாங்காட்டு வலசு பகுதியை சேர்த்த சின்னசாமி. இவரது மனைவி மாதம்மாள் (48). கீரை வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் மாதம்மாள் கடந்த 2 மாதங்களாக வயிற்று வலி காரணத்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் இரவு உறங்க சென்றனர். பின்னர் சின்னசாமி காலை எழுந்து வெளியே வந்து பார்க்கும்போது கதவு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் இட்டு இருந்தது.

உடனே அவர் மகனுக்கு போன் செய்து கதவை திறக்க வருமாறு கேட்டுள்ளார். பின்னர் கதவை திறந்து பார்க்கும் போது அருகில் உள்ள ஒரு அறையில் மாதம்மாள் தூக்கில் தொங்கியவாறு இருந்தார்.

உடனடியாக அவரை இறக்கி பார்த்தபோது மாதம்மாள் இறந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com