search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழுங்கல் அரிசி"

    • 1250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
    • தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொ ருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

    இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து 1300 டன் யூரியா, காம்ப்ளக்ஸ், டிஏபி உரங்கள் சரக்கு ரயிலில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது.

    பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதே போல் தஞ்சையில் இருந்து கன்னியாகுமரிக்கு பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதற்காக 1250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
    • 2 ஆயிரத்து 500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் தலா 1,250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு பொது வினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    ×