search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலிக்குட்டி"

    • புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன.
    • புலிகள் காப்பகத்தின் வெளிப்புற பகுதிகளில் அடிக்கடி புலியின் நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் "சத்தியமங்கலம் புலிகள் காப்பக" வனப்பகுதி உள்ளது.

    இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக இந்த பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புலிகளின் எண்ணிக்கை வனப்பகுதியில் கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இதனால் புலிகள் காப்பகத்தின் வெளிப்புற பகுதிகளில் அடிக்கடி புலியின் நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடம்பூரில் இருந்து மலைப்பகுதியில் உள்ள குன்றிவனம் கிராமத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் 2 புலிக்குட்டிகள் சாவகாசமாக நடந்து சென்று கொண்டிருந்தது. இந்த புலிக்குட்டிகள் தங்களுக்குள் விளையாடிக்கொண்டே ஜாலியாக சென்றது.

    உடனடியாக பஸ்சின் வேகத்தை குறைத்த டிரைவர் புலிக்குட்டிகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை மிதமான வேகத்தில் பஸ்சை இயக்கியுள்ளார். தாய் புலி அருகில் இல்லாமல் குட்டிகள் அப்பகுதியில் சுற்றி திரிந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பஸ்சில் இருந்தவர்கள் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் இறந்துள்ளது.
    • புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு கடமானின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி வனக்கோட்டத்தில் ஊட்டி வனசரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள சின்னகுன்னூரில் தாய்புலி ஒன்று 4 குட்டிகளுடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

    வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 குட்டிபுலிகள் சடலமாகவும், ஒரு குட்டிப்புலி உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டது. ஆனால் அந்த புலியும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

    மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் இறந்துள்ளது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இறந்த குட்டி புலிகளின் தாய் புலியின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அதனை தொடர்ந்து தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாளில் 4 வயதான புலிகள், 6 குட்டிப்புலிகள் என 10 புலிகள் இறந்துள்ளன. ஆகஸ்டு 16-ந் தேதி சீகூர் வனப்பகுதியில் நீரோடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன. அதனை ஆய்வு செய்தபோது அவை தாய்புலியால் கைவிடப்பட்டது தெரியவந்தது.

    ஆகஸ்டு 17-ந் தேதி நடுவட்டத்தில் ஒரு புலி இறந்து கிடந்தது. அந்த புலியின் உடலில் உள்ள காயங்களை ஆய்வு செய்த போது வேறு ஒரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது..

    இதேபோல் புலிகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆகஸ்டு 31-ல் ஒரு புலி இறந்தது.

    தொடர்ந்து கடந்த 9-ந் தேதி அவலாஞ்சி உபரி நீர் ஓடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன.

    மாட்டு மாமிசத்தில் விஷம் வைத்து இந்த புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உடல் உறுப்புகள் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தி சேகர் என்பவரை கைது செய்துள்ளோம்.

    கடந்த 14-ந் தேதி சின்னக்குன்னூரில் புலிக்குட்டிகள் சுற்றுவதாக வந்த தகவலின் பேரில் புலிகளை கண்டுபிடிக்கும் வல்லுநர்களை அனுப்பி தேடும் பணி நடந்தது.

    அடர்ந்த வனப்பகுதியில் 3 புலிக்குட்டிகள் இறந்த நிலையிலும், ஒரு புலிக்குட்டி உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டது.

    அதனை மீட்டு சிகிச்சை அளித்த போது அந்த குட்டிபுலியும் இறந்துவிட்டது.

    இறந்த குட்டிகளை ஆய்வு செய்த போது, 4 குட்டிகளும் உணவின்றி இறந்தது தெரியவந்தது. இவற்றின் உடல் உறுப்பின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு கடமானின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதன் மாதிரியும் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். மேலும் குட்டிகளின் தாய்புலியை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும்.

    மேலும் கோரகுந்தா, குந்தா, நடுவட்டம் உள்ளிட்ட 6 சரகங்களில் முகாம்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும். அத்துடன் அங்கு தொடர் கண்காணிப்புக்காக வேட்டை தடுப்பு காவலர்களும் நியமிக்கப்படுவர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த ஆண்டு, புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டது.
    • புலிக்குட்டியை அடைத்து வைத்து வேட்டையாடுவதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.

    கோவை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வால்பாறை முடீஸ் பஜார் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஆண்டு, புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டது.

    அந்த புலிக்குட்டி பிறந்து 8 மாதம் இருக்கும். இதையடுத்து வனத்துறையினர் அந்த புலிக்குட்டியை மீட்டு மானாம்பள்ளி வனசரகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

    அதற்காக சிறப்பு கூண்டு ஒன்று அமைத்து, அதில் புலிக்குட்டியை அடைத்து வைத்து வேட்டையாடுவதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது. கூண்டில் அடைக்கப்பட்டு வனத்துறையினர் வழங்கிய இறைச்சியை சாப்பிட்டு பழகியதால் இயற்கையாகவே உணவை சாப்பிடும் உணர்வின்றி காணப்பட்டது.

    எனவே புலி வேட்டையாடி பழகும் வகையில், அதற்காகவே கூண்டுக்குள் உயிருடன் முயல்கள் விடப்பட்டன. அதனை புலிக்குட்டி வேட்டையாடி சாப்பிட்டது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.

    புலிக்குட்டியின் வேட்டையாடும் முறைகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அடுத்த கட்டமாக வேறு விலங்குகளை கூண்டில் விட்டு வேட்டையாட பயிற்சி அளிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். எட்டு மாத குட்டியாக காயங்களுடன் மீட்கப்பட்டபோது 80 கிலோவாக இருந்த புலி ஒன்றரை வயதில் 144 கிலோ எடையுடன் ஆரோக்கியமாகவும், சுறு,சுறுப்பாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×