search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiger cub"

    • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
    • மற்ற குட்டிகளுக்கு 'சிரஞ்சீவி' மற்றும் 'சிராயு' என்று பெயர் சூட்டப்பட்டது.

    புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்த ஒரு புலிக்குட்டிக்கு பாராலிம்பிக் பதக்கம் வென்ற அவனி லெகாராவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

    மற்ற குட்டிகளுக்கு 'சிரஞ்சீவி' மற்றும் 'சிராயு' என்று பெயர் சூட்டப்பட்டது.

    இதுகுறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச புலிகள் தினத்தை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்றும் வகையில், ரந்தம்போரின் டி-111 என்ற புலியின் மூன்று குட்டிகளுக்கு (இரண்டு புலிகள் மற்றும் ஒரு புலி) 'சிரஞ்சீவி', 'சிராயு' மற்றும் 'அவனி' என பெயரிடப்பட்டுள்ளது.

    2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா பூனியாவின் நினைவாக டைக்ரஸ் டி-17 க்கு கிருஷ்ணா என்று பெயரிடப்பட்டது. அதேபோல், இப்போது குட்டிக்கு பாராலிம்பிக் பதக்கம் வென்ற அவனி லெகாரா பெயரில் அவனி என்று பெயரிடப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அவனி லெகாரா, 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகளில் வெண்கலப் பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சோர்வாக உள்ள புலிக்குட்டிகளுக்கு வன உயிரியல் பூங்கா ஊழியர்கள் உணவு கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
    • கால்நடை மருத்துவர்கள் புலிக்குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    நந்தியாலா:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஆத்ம கூறு, கும்மடாபுரம் கிராம வனப்பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு 4 பெண் புலி குட்டிகள் இருந்தன.

    இதனை வனத்துறை அதிகாரிகள் ஆத்மா கூறுவன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    குட்டி புலிகளை தாய் புலியுடன் சேர்க்கும் பணி முழு வீச்சில் நடந்தது. கும்மடாபுரம் நல்லமல்லா வனப்பகுதியில் வனத்துறையினர் சுமார் 70 டிராப் கேமராக்கள் உதவியுடன் 300 பணியாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் தாய் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 4 நாட்களாக தாய் புலியை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தாயை விட்டு பிரிந்து உள்ளதால் புலிக்குட்டிகள் சரிவர உணவு அருந்தாமல் சோர்வாக காணப்படுகிறது.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் 4 புலி குட்டிகளையும் நேற்று இரவு திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். சோர்வாக உள்ள புலிக்குட்டிகளுக்கு வன உயிரியல் பூங்கா ஊழியர்கள் உணவு கொடுத்து பராமரித்து வருகின்றனர்.

    மேலும் கால்நடை மருத்துவர்கள் புலிக்குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    விரைவில் தாய் புலியை கண்டுபிடித்து அதனுடன் குட்டிகள் ஒன்று சேர்க்கப்படும் என தெரிவித்தனர்.

    • கடந்த ஆண்டு, புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டது.
    • புலிக்குட்டியை அடைத்து வைத்து வேட்டையாடுவதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.

    கோவை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வால்பாறை முடீஸ் பஜார் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஆண்டு, புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டது.

    அந்த புலிக்குட்டி பிறந்து 8 மாதம் இருக்கும். இதையடுத்து வனத்துறையினர் அந்த புலிக்குட்டியை மீட்டு மானாம்பள்ளி வனசரகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

    அதற்காக சிறப்பு கூண்டு ஒன்று அமைத்து, அதில் புலிக்குட்டியை அடைத்து வைத்து வேட்டையாடுவதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது. கூண்டில் அடைக்கப்பட்டு வனத்துறையினர் வழங்கிய இறைச்சியை சாப்பிட்டு பழகியதால் இயற்கையாகவே உணவை சாப்பிடும் உணர்வின்றி காணப்பட்டது.

    எனவே புலி வேட்டையாடி பழகும் வகையில், அதற்காகவே கூண்டுக்குள் உயிருடன் முயல்கள் விடப்பட்டன. அதனை புலிக்குட்டி வேட்டையாடி சாப்பிட்டது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.

    புலிக்குட்டியின் வேட்டையாடும் முறைகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அடுத்த கட்டமாக வேறு விலங்குகளை கூண்டில் விட்டு வேட்டையாட பயிற்சி அளிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். எட்டு மாத குட்டியாக காயங்களுடன் மீட்கப்பட்டபோது 80 கிலோவாக இருந்த புலி ஒன்றரை வயதில் 144 கிலோ எடையுடன் ஆரோக்கியமாகவும், சுறு,சுறுப்பாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×