search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேமம்"

    • அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பிரேமம்'.
    • மலர் டீசர் கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

    கடந்த 2015-ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'பிரேமம்'. இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா ஜெபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    இப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அல்போன்ஸ் புத்திரனுக்கு இப்படம் மிகப்பெரிய மையில்கல்லாக அமைந்தது. 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவியை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ராஜேஷ் முருகன் இசையில் 'பிரேமம்' படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் 'மலரே நின்னை காணாதிருந்தால்' பாடல் இன்றும் காதலர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், 'பிரேமம்' திரைப்படம் தமிழில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மலையாள சினிமாவிற்கு ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கியது.


    இந்நிலையில், மலர் டீச்சரை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'பிரேமம்' திரைப்படம் பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருப்பவர் அல்போன்ஸ் புத்திரன்.
    • இவர் தற்போது 'கிஃப்ட்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து 'பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கோல்டு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் தற்போது 'கிஃப்ட்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.


    இந்நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நான் இனி எதையும் பதிவிடப்போவதில்லை. என் அம்மா, அப்பா, சகோதரிகளுக்கு இது பிடிக்கவில்லை. ஏனென்றால் எனது உறவினர்கள் அவர்களை பயமுறுத்துகிறார்கள். நான் அமைதியாக இருப்பது அனைவருக்கும் நிம்மதியை தரும் என நினைக்கிறேன். அதனால் அப்படியே இருக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


    ×