search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால்குட"

    • மகா மாரியம்மன் கோவி லில் பால்குட அபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை மகா மாரியம்மனுக்கு கண பதி ஹோமமும், யாக வேள்ளியும் நடைபெற்றது.
    • மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் 100 திருவிளக்கு நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையா றில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவி லில் பால்குட அபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை மகா மாரியம்மனுக்கு கண பதி ஹோமமும், யாக வேள்ளியும் நடைபெற்றது.மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் 100 திருவிளக்கு நடைபெற்றது. இரவு கோயில் வளாகம் முன்பு 1008 திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது. இதில் ஆயிரக்க ணக்கான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.

    நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடங்க ளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்த டைந்தனர். பகல் 12- மணிக்கு மகா மாரி யம்மனுக்கு 10,008 பால்குட அபிஷேகம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபி ஷேக ஆராதனை களும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. இதில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊஞ்சல் உற்சவம்

    இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடு களை நன்செய் இடையாறு மகா மாரி யம்மன் கோவில் பரம்பரை அறங்கா வலர்கள், எட்டுப் பட்டி ஊர் தர்ம கர்த்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் பொத்தனூர் மகாபகவதி அம்மன் கோவிலில் 108பால்குட அபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை பம்பை மேளம் முழங்க பால்குடங்க ளுடன் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பால் குடங்களுக்கு அபி ஷேகம் செய்து பால்குடங்க ளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.

    காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் பகவதி அம்ம னுக்கு பாலா பிஷேகமும், திருமஞ்சன அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், அன்னதானமும் நடை பெற்றது. விழாவிற்கான ஏற்பாடு களை பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவில் பால்குட அபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர்.

    • ஆனங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி, பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • காலை 8 மணிக்கு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி, பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து காப்பு கட்டி பண்டாரம், தினமும் இரவு 7 மணிக்கு மேல் தீச்சட்டியை ஏந்தி கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சியும், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்று வந்தது.

    நேற்று முன்தினம் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இன்று மாலை பொங்கல், மாவிளக்கு திருவிழா நடைபெறுகிறது.

    முன்னதாக காலை 8 மணிக்கு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அருகில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் வளாகத்தில் பால்குடங்களை வைத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அங்கிருந்து புறப்பட்ட பால்குடம் ஊர்வலம், மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை, மாரியம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவி யங்களால் அபிஷேகமும், பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை 5 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்தும் பூஜை செய்வர். இரவு வான வேடிக்கையும் நடைபெறுகிறது.

    நாளை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.

    • பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கி ழமையன்று ஒவ்வொரு வரு டமும் பால்குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
    • மகா மாரியம்மனுக்கு 32-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கி ழமையன்று ஒவ்வொரு வரு டமும் பால்குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதே போல் இந்த வருடமும் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று மகா மாரியம்மனுக்கு 32-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால் குடங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர். பிற்பகல் 12 மணிக்கு மகா மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. இதில் வேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.பால்குட அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுவினர், பால்குட அபிஷேக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×