search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா"

    • சட்ட விரோத செயல்பாடுகள் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
    • சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

    சட்ட விரோத செயல்பாடுகள் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல் அதற்கு நிதியளித்தல் உள்பட தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டு உள்ளது.

    இதையடுத்து இந்த அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு மீது விசாரணை இன்று நடக்கிறது.

    சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்தது.
    • மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அந்த அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்தது.

    இந்நிலையில், இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டு வரும் 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதில் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்பட 6 மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மலப்புரம் பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் வீடுகளிலும், அலுவலகத்திலும் இன்று என்.ஐ.ஏ. அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர்.
    • ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகள், வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் பண பரிமாற்றம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

    திருவனந்தபுரம்:

    மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்காணித்து வருகிறார்கள்.

    அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர்.

    இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் நாடு முழுவதும் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த அமைப்புகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 16 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    குறிப்பாக தென்கன்னட பகுதியில் மங்களூரு மற்றும் புதூர், பெல்டங்காடி, உப்பினங்காடி, வெனுர், பன்டேவால் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள், அலுவலகங்கள் ஆகியவற்றிலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த ஆஸ்பத்திரிகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபோல கேரளா மாநிலத்தில் மலப்புரம் பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் வீடுகளிலும், அலுவலகத்திலும் இன்று என்.ஐ.ஏ. அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். அங்குள்ள ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகள், வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் பண பரிமாற்றம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதுபோல பீகார் மாநிலத்திலும் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பீகார், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த இச்சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
    • அடிக்கடி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தடை செய்யப்பட்டது. அந்த அமைப்பின் துணை நிறுவனங்களும் தடை செய்யப்பட்டன.

    என்றாலும் தடையை மீறி அந்த அமைப்பின் நிர்வாகிகள் ரகசியமாக செயல்பட்டு வருவதாக மத்திய உளவுத் துறைக்கு தகவல்கள் தெரிய வந்தன.

    உளவுத்துறையினர் கொடுத்த உஷார் தகவலின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அடிக்கடி நாடுமுழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் 108 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பு 285 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. 5 குற்றப்பத்திரிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த குற்றப் பத்திரிக்கைகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன்பேரில் அடிக்கடி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் இன்று உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், கோவா ஆகிய 4 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட னர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.

    பீகார் மாநிலத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. உத்தரபிரதேசத்தில் 2 இடங்கள், பஞ்சாப், கோவாவில் தலா ஒரு இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

    மொத்தம் 17 இடங்களில் சோதனை நடப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் கட்டமாக இன்று கேரளா முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, அதன் துணை குழுக்களின் அலுவலகங்கள் என 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும், எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், மலப்புரம், ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும் என 56 இடங்களில் சோதனை நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    பாப்புலர் பிரண்டு அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனை தமிழகத்திலும் நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர். இதையடுத்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இச்சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். கேரளாவிலும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மேலும் பல துணை குழுக்கள் இருப்பது தெரியவந்தது.

    இத்துணைக்குழுக்கள் மூலம் இந்த அமைப்பினர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவித்தனர். எனவே கைதானவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இதில் பல முக்கிய தகவல்கள் என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது. அதன்அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு மற்றும் இந்த அமைப்புக்கு தொடர்புடைய துணை குழுக்களின் அலுவலகங்களில் சோதனை நடத்த என்.ஐ.ஏ. முடிவு செய்தது.

    அதன்படி முதல் கட்டமாக இன்று கேரளா முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, அதன் துணை குழுக்களின் அலுவலகங்கள் என 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும், எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், மலப்புரம், ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும் என 56 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது. இதுபோல பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் இச்சோதனை நடைபெற்றது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் அதன் 8 துணை அமைப்புகளுக்கும் விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தன. அப்போது அந்த அமைப்புக்கு வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா அடிப்படையில் ரூ.120 கோடி திரட்டப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதையும் புலனாய்வு அமைப்புகள் உறுதிபடுத்தின. இதையடுத்து கடந்த 22-ந்தேதி 15 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து "ஆபரேசன் ஆக்டோபஸ்" என்ற பெயரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    93 இடங்களில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களிலும், அதன் நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 27-ந்தேதி 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள்.

    2 தடவை நடந்த சோதனையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பணபரிமாற்றங்கள் தொடர்பாக ஆவணங்கள் சிக்கியது. அந்த ஆவணங்களை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது தொடர்பாக ஆய்வு செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி இரவு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோதமான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாப்பு லர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ரீகேப் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, ஆல் இந்திய இமாம் கவுன்சில், மனித உரிமை கழக தேசிய கூட்டமைப்பு, தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன், ரீகேப் பவுண்டேஷன் கேரளா ஆகிய 8 துணை அமைப்புகள் இருக்கின்றன. அந்த 8 அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் அதன் 8 துணை அமைப்புகளுக்கும் விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளன.

    அந்த அமைப்பின் டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்களின் தொடர்புகள் அனைத்தும் தடுக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்புகளின் அலுவலகங்களை மூட மத்திய அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

    தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கிருந்து தான் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள கிளை அலுவலகங்களுக்கு ஆவணங்கள், பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன.

    தமிழக பாப்புலர் பிரண்ட் ஆப் நிர்வாகிகள் இந்த அலுவலகத்தில் அமர்ந்து தான் ஆலோசனை செய்வார்கள். மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த அலுவலகத்தை மூடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.

    இதற்கான நடவடிக்கைகள் இன்று காலை எடுக்கப்பட்டன. சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். காலை 7 மணியளவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    அதோடு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கொடிக்கம்பத்தையும் அகற்றினார்கள். பெயர் பலகையும் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தமிழக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதால் அதன் உறுப்பினர்கள் கடும் அதிருப்தியும், வேதனையும் அடைந்து உள்ளனர். இதையடுத்து அந்த தலைமை அலுவலகம் பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    தமிழகம் போலவே கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுக–ளுக்கு தடை செய்துள்ளது.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது.

    திருப்பூர்:

    இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு சட்ட விரோதமான பண பரிவர்த்தனை செய்ததாலும், பயங்கரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டியதாகவும்கூறப்படுகிறது. இதனால் இந்த அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளது.

    இந்த அமைப்பை ஏற்கனவே தடை செய்ய வேண்டும் என்று 2018-ம் ஆண்டு எனது சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அரசாங்கம் தான் இதுபோன்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தது. எனவே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாஜக மற்றும் இந்து அமைப்பு பிரமுகர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
    • சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.

    திருச்சி:

    டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை திடீர் ஆய்வு மேற்கொண்டது.

    பின்னர் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி அந்த அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த சோதனை மற்றும் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்துள்ளன.

    மேலும் பாஜக மற்றும் இந்து அமைப்பு பிரமுகர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

    இந்த நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.

    அதன் அடிப்படையில் திருச்சி மரக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து சுதந்திர தின அமுதப் பெருவிழா, காந்தி ஜெயந்தி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக ஆர்.எஸ்.எஸ். சார்பில் வருகிற 2-ந்தேதி நடைபெற இருந்த ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சேதுராமன் அனுமதி கோரி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடிதம் அளித்திருந்தார்.

    தற்போது மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக எழுத்து மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இது ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
    • சென்னை முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

    சென்னை, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன.

    இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது.

    இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போதும் பலர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த 2 சோதனைகளின்போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. இதனை தொடரந்து, பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

    இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. அந்த வகையில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்கள் முழு உஷார் நிலையில் இருக்கவும், சென்னை முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் பிஎப்ஐ அமைப்பை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணையை வெளியிட்டுள்ளது.

    • பி.எப்.ஐ. இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.
    • பி.எப்.ஐ. பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் கைது செய்யப்பட்டதாக தகவல்.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் அந்த அமைப்புகள் செயல்பட 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, அந்த அமைப்பின் இணையதளம், டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளையும் முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையை அடுத்து கேரளாவில் பி.எப்.ஐ. அமைப்பை கலைத்து விட்டதாக அதன் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த நாட்டின் சட்டத்தின்படி செயல்படுகிற குடிமக்களாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவை தங்கள் அமைப்பு ஏற்றுக்கொள்கிறது என்றும், பி.எப்.ஐ. கலைக்கப்பட்டு விட்டது என அதன் உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் சட்டரீதியாக இதை  எதிர்கொள்ள உள்ளதாகவும் அப்துல் சத்தார் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவர், கருநாகப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • அமைப்பின் நிர்வாகிகள் இல்லங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை செய்தனர்.
    • 250க்கும் மேற்பட்ட அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூர் :

    நாடு முழுவதும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் இல்லங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 250க்கும் மேற்பட்ட அந்த அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஒன்றிய அரசு ஐந்தாண்டு கால தடை விதித்துள்ளது.

    இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்ததை கண்டித்தும் உடனடியாக அந்த தடையை ரத்து செய்ய கோரி திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 30 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் காங்கேயம் ரோடு சி.டி.சி கார்னர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் அங்கு பாதுகாப்பு நின்ற போலீசார் கைது செய்தனர்.

    • ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
    • விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

    திருப்பூர் :

    பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

    ×